நீட் தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு : தேசிய தேர்வு முகமை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 6, 2022

நீட் தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு : தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு : தேசிய தேர்வு முகமை

புதுடில்லி:நீட்தேர்வு எழுதும் நேரத்தை அதிகரித்து உத்தரவுபிறப்பித்துள்ளது தேசிய தேர்வு முகமை.

இது குறித்து கூறப்படுவதாவது: இளநிலை மருத்துவபடிப்பிற்கான தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திவருகிறது. இதனிடையே இள நிலை மருத்துவ படிப்பிற்கான எழுத்து தேர்வை 3 மணி நேரம் 20 நிமிடங்களாக அதிகரித்து உள்ளது. மொத்தம் உள்ள 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் என்ற அடிப்படையில் நேர நிர்ணயம் செய்துள்ளது.

இளநிலை மருத்துவ படிப்பிற்கான எழுத்து தேர்வு இந்தாண்டு ஜூலை மாதம் 17 ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நீட் தேர்வு எழுத 3 மணிரேநரம் மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது இந்தாண்டு 2022-க்கான தேர்வின் போது 20 நிமிடங்கள் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.