தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் மும்மொழிக் கல்விக் கொள்கை; மாநில அரசு 'கமுக்கம்' - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 23, 2022

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் மும்மொழிக் கல்விக் கொள்கை; மாநில அரசு 'கமுக்கம்'

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில், நீண்ட காலமாக அமலில் உள்ள இரு மொழி கொள்கையை மாற்றி, மும்மொழிக் கொள்கையை புகுத்தும் நடவடிக்கைகள் சத்தமின்றி துவங்கி உள்ளன.

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கை அம்சங்களுடன், புதிய திட்டங்களையும் சேர்த்து, பள்ளிகளில் நடப்பாண்டில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்றாவது மொழித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுதும் பல மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என மும்மொழி கொள்கை நடைமுறையில் உள்ளது.புதிய கல்விக் கொள்கை யிலும், மும்மொழி கொள்கையின் முக்கியத்துவம் குறித்து கூறப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகத்தில் பல ஆண்டுகளாகவே மூன்றாவதாக ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகள்இடம் பெறக்கூடாது என, அரசியல் ரீதியாக எதிர்ப்புகள் உள்ளன.

அதிலும், தி.மு.க., உள்ளிட்ட திராவிட கட்சிகள், மும்மொழி கொள்கையை அமல்படுத்தக் கூடாது என்பதில் பிடிவாதமாக உள்ளன.மறைமுகமாக அமல்இதற்கிடையில், புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கை திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் மறைமுகமாக அமலாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடப்பு ஆண்டில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாவட்ட அளவில் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மே 5ம் தேதி துவங்க உள்ள, இந்த தேர்வுக்கான அட்டவணையை, பள்ளிக் கல்வி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

அதில், முதல் தேர்வாக மொழி பாடத்திற்கும், இரண்டாவதாக ஆங்கில பாடத்திற்கும் தேர்வு நடத்தப்படுகிறது.மூன்றாவது தேர்வாக, விருப்ப மொழி பாடம் என்ற, கூடுதல் மொழி தேர்வு இணைக்கப்பட்டு உள்ளது.மூன்றாவது மொழி என்றால், ஹிந்தி, உருது, சமஸ்கிருதம் என,எந்த மொழியாகவும்இருக்கலாம்.

இதில் இருந்து, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் படி, தமிழகத்தில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இரு மொழி கொள்கையை மாற்றி, மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதற்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை முன்னோட்டம் பார்க்கத் துவங்கி உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங்கள், மாநில பாடத் திட்டத்தின் வழியாக சத்தமின்றி அறிமுகமாகி வருகின்றன. சமக்ர சிக் ஷா நிதி

இல்லம் தேடி கல்வி திட்டம்; ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகள்; மாதிரி பள்ளிகள்; 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு கூடுத லாக தொழிற்கல்வி பாடங்கள்; எண்ணும் எழுத்தும் திட்டம்; தன்னார்வலர்களை பயன்படுத்தும் பயிற்சி திட்டம்உள்ளிட்ட பல அமலுக்கு வந்துள்ளன.இந்த திட்டங்கள், புதிய கல்விக் கொள்கையில் இருந்தாலும், அவற்றை மாநில அரசின் திட்டங்கள் போல அறிவித்து, பள்ளிகளில் நடைமுறைப்படுத்து கின்றனர்.

ஆனால், இவற்றுக்கு மத்திய அரசின் சமக்ர சிக் ஷா நிதியில் இருந்து தான் செலவுகள் செய்யப்படுகின்றன.இந்த வரிசையில், மூன்றாவது மொழி பாடமும் தமிழக பள்ளிகளில் அறிமுகமாகி இருப்பது, நீண்ட கால மொழிக் கொள்கையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளதை காட்டுவ தாக, பள்ளிக் கல்விவட்டாரங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.