வேறு பள்ளிக்கு சென்ற ஆசிரியர்களை மீண்டும் நியமிக்க மாணவர்கள் திடீர் சாலை மறியல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 17, 2022

வேறு பள்ளிக்கு சென்ற ஆசிரியர்களை மீண்டும் நியமிக்க மாணவர்கள் திடீர் சாலை மறியல்

பாணாவரம் அருகே, பள்ளி மாணவர்கள் பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், மணி நேரம் போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிக்க | கோடை விடுமுறையில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் - புள்ளி விவரம் திரட்டும் பணி மும்முரம்

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே உள்ள மேல் வீரா ணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 107 மாணவர் கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் 3 பேர். கவுன்சிலிங் காரணமாக வேறொரு பள்ளிக்குமாற்ற லாகி சென்று விட்டனர்.

இந்நிலையில், இப் பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக் கள் இங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய் யக் கோரியும், ஏற்கனவே இப் பள்ளியில் பணியாற்றி கவுன்சிலிங் மூலம் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட 3 ஆசிரி யர்களை மீண்டும் இப் பள்ளியில் பணியமர்த்த கோரியும், சோளிங்கர்- காவேரிப்பாக்கம் சாலை யில் நேற்று திடீர் மறிய லில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.