அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 6 – 2021-2022-ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் / இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக் கால அட்டவணைகள் அனுப்பி வைத்தல் மற்றும் தேர்வுகள் நடத்துதல் குறித்த அறிவுரைகள் - தொடர்பாக.
1. இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம், நாள்:28.12.2021 .
பார்வை :
2. இதே எண்ணிட்ட செய்திக்குறிப்பு, நாள்.31.01.2022.
3. இவ்வலுவலக கடித ந.க.எண்.12/மந்தணம்/2021, நாள்.29.12.2021.
பார்வையில் காணும் இவ்வலுவலகக் கடிதத்தில், 2021-2022-ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் / இரண்டாம் திருப்புதல் தேர்வுகளுக்காக கால அட்டவணை முறையே 19.01.2022 மற்றும் 21.03.2022 ஆகிய நாட்களில் தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக 19.01.2022 முதல் 31.01.2022 வரையிலான நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதன் காரணமாக திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக் கால் அட்டவணைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இத்தேர்வுகள் குறித்த விபரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறியும்வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் முதல் திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் நாட்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறும் தினங்களில் பள்ளித் தலைமையாசிரியர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாத இதர ஆசிரியர்களைக் கொண்டு தேர்வினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காவகையில் சுமூகமாக நடத்திட உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
பார்வை-3 இல் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றி திருப்புதல் தேர்வுகளுக்கான விடைத்தாட்கள் திருத்தும் பணியினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம், நாள்:28.12.2021 .
பார்வை :
2. இதே எண்ணிட்ட செய்திக்குறிப்பு, நாள்.31.01.2022.
3. இவ்வலுவலக கடித ந.க.எண்.12/மந்தணம்/2021, நாள்.29.12.2021.
பார்வையில் காணும் இவ்வலுவலகக் கடிதத்தில், 2021-2022-ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் / இரண்டாம் திருப்புதல் தேர்வுகளுக்காக கால அட்டவணை முறையே 19.01.2022 மற்றும் 21.03.2022 ஆகிய நாட்களில் தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக 19.01.2022 முதல் 31.01.2022 வரையிலான நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதன் காரணமாக திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக் கால் அட்டவணைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இத்தேர்வுகள் குறித்த விபரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறியும்வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் முதல் திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் நாட்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறும் தினங்களில் பள்ளித் தலைமையாசிரியர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாத இதர ஆசிரியர்களைக் கொண்டு தேர்வினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காவகையில் சுமூகமாக நடத்திட உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
பார்வை-3 இல் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றி திருப்புதல் தேர்வுகளுக்கான விடைத்தாட்கள் திருத்தும் பணியினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.