20.12.2025 - சனிக்கிழமை பள்ளி வேலைநாள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 19, 2025

20.12.2025 - சனிக்கிழமை பள்ளி வேலைநாள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்



20.12.2025 - சனிக்கிழமை பள்ளி வேலைநாள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

சனிக்கிழமை பள்ளி வேலைநாள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்



19.12.2025

பொருள்: பள்ளிக் கல்வி விழுப்புரம் மாவட்டம் - அனைத்து வகை பள்ளிகளுக்கும் 20.12.2025 சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்பட ஆணையிடுதல் - தொடர்பாக

மழையின் காரணமாக விடுமுறை விடப்பட்ட நாட்களை ஈடு செய்யும் விதமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 20.12.2025 சனிக்கிழமை அன்று பணி நாளாகும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் வியாழக்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/தாளாளர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.



25 விழுப்புரம். 19/12/

பெறுதல்

அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், விழுப்புரம் மாவட்டம்,

நகல்:


20.12.2025 - சனிக்கிழமை பள்ளி வேலைநாள் அறிவிப்பு. December 20, 2025 - Announcement regarding Saturday as a school working day.

இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட அரக்கோணம் மற்றும் நெமிலி தாலூக்காவிற்கு 03.12.2025 அன்று மழையின் காரணமாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது . அதனை ஈடுசெய்யும் பொருட்டு அரக்கோணம் மற்றும் நெமிலி தாலூக்காவிற்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளுக்கும் 20.12.2025 ) சனிக்கிழமை அன்று முழு வேலை நாளாக செயல்பட அறிவிக்கப்படுகிறது . புதன் கிழமை கால அட்டவணை பின்பற்றப்பட வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.