ஆசிரியர் இடமாறுதலில் கல்வி அதிகாரிகள் ‘தில்லுமுல்லு’ - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 12, 2025

ஆசிரியர் இடமாறுதலில் கல்வி அதிகாரிகள் ‘தில்லுமுல்லு’



ஆசிரியர் இடமாறுதலில் கல்வி அதிகாரிகள் ‘தில்லுமுல்லு’

பள்ளிக்கல்வித் துறை யின் கீழ், மலைப்பகுதி களில் இயங்கும் உயர் நிலை. மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஆசிரியர் களை பணியிட மாறுதல் செய்வதில், அதிகாரிகள் முறைகேடில் ஈடுபடுவ தாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், நீலகிரி, கிருஷ்ணகிரி, கிரி, வேலுார், ஈரோடு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மலைப் பகுதி பள்ளிகள் உள்ளன.

மற்ற பள்ளிகளை ஒப்பி டும்போது, அவற்றுக்கான போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு வசதி கள் குறைவு என்பதால், அப்பள்ளிகளில் பணி யாற்ற: ஆசிரியர்கள் முன் வருவதில்லை.

எனவே, அப்பள்ளி களில் பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு சிறப்பு சலுகை கள் வழங்கப்படுகின்றன. கிருஷ்ணகிரி போன்ற சில மாவட்டங்களில், பகு தியளவு மலையாகவும், பகுதியளவு சமவெளியாக வும் உள்ளன.

இந்நிலையில், சலுகை களை பெறுவதற்காக, மலைப் பகுதிகளுக்கு இட மாறுதல் பெற, சில ஆசிரி யர்கள் முன்வருகின்றனர்.

ஆனால், அவர்கள் அப்பள்ளிகளுக்கு செல் லாமல், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவ லர்களிடம் சிறப்பு அனு மதி பெற்று, சமவெளிப் பகுதி பள்ளிகளில் பணி புரிகின்றனர்.

அதேநேரம், மலைப் பகுதிகளில் காலிப்பணி யிடங்கள் காட்டப்படு வதில்லை.இதனால், பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு, பிளஸ் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து, கிருஷ் ணகிரி மாவட்ட அரசு மேல்நிலைப் பன்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட் டத்தை பொறுத்தவரை, ஒசூர், கிருஷ்ணகிரி என, இரண்டு கல்வி மாவட்டங் கள் உள்ளன. ஒசூர் கல்வி மாவட்டத்தில், தனி, கெல மங்கலம், ஒசூர், சூளகிரி ஒன்றியங்கள் உள்ளன.

கிருஷ்ணகிரி கல்வி தூர், வேப்பனப்பள்ளி, வாத்தங்கரை ஒன்றியங்கள் மாவட்டத்தில், காவேரிப் பட்டணம், பர்கூர், மத் உள்ளன.

ஒசூர் கல்வி மாவட் டத்தில் உள்ள ஒன்றியங் கள், மலைப்பகுதிகளில் அமைந்துள்ளன. இதனால், இப்பகுதிகளில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மலைப் படியாக மாதம் 6,000 ரூபாய் வழங்கப் 2படுகிறது.

இதை பெறுவதற்காக. இடமாறுதல் கலந்தாய் வில் பங்கேற்கும் ஆகிரி யர்கள், அப்பகுதிகளை தேர்வு செய்கின்றனர்.

ஒரு சில மாதங்களில், எங்கய்யா உங்க வாத்தியாரு?

கல்வி மாவட்ட அதி காரிகள், முதன்மை கல்வி அதிகாரிகளை சந் கித்து, சிறப்பு அனுமதி பெற்று, தங்களின் வசிப் பிடத்துக்கு அருகில், ஏற்க னவே அதிக ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகள் அல்லது மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, மாற் றுப்பணி பெறுகின்றனர்.

இதற்காக, தாங்கள் பெறும் சிறப்பு படியில் பாதியை அதிகாரிகளுக்கு தருகின்றனர்.

இதுபோல், கிருஷ்ண கிரிமாவட்டத்தில் மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில், 50க்கும் மேற்பட்ட ஆசி ரியர்கள். இவ்வாறு முறை கேடில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், அரசின் சார் பில் வழங்கப்பட்ட சிறப்பு படி மட்டுமே, கோடி ரூபாய்க்கு மேல் வீணாகி உள்ளது. இதுபோல், மற்ற மாவட்ட பள்ளிக் இருக்காரு झुणा... இல்லை! சேர்த்தால், பல நுாறு கோடி ரூபாய் இருக்கும். இவர்களை போன்ற ஆசிரியர்களை, பணிக்கு வருமாறு கட்டாயப்ப டுத்த, மலைப்பகுதி பள்ளி தலைமை ஆசிரியர்களால் முடிவதில்லை, அவர் கள், பள்ளி மேலாண்மை குழு சார்பில், அனுபளம் இல்லாத ஆசிரியர்களை நியமிக்கின்றனர்..

இதனால், மலைப்ப குதி பள்ளிகள், கல்வியில் பின்தங்குவதுடன், மாண வர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.

இது போன்ற முறைகே. டில் ஈடுபடும் ஆசிரியர் கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மலைப்ப குதிகளுக்கு செல்லும் ஆசி ரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதையும் தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.