எந்த அரசுப் பள்ளியையும் மூடும் திட்டம் இல்லை - பள்ளிகளை மேம்படுத்தவே ஆய்வுக் கூட்டம்: கல்வி அதிகாரி விளக்கம்
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வெளியிட்ட அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் 85-க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளை மார்ச் மாதத்துக்குள் மூடும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது” என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (பொ) நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில். “நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான மாவட்டக் கல்வி அதிகாரி மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள எந்த அரசுப் பள்ளியையும் மூடும் திட்டமோ, உத்தரவுகளோ இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிகை செய்தி
நீலகிரி மாவட்டத்தில் 287 அரசு நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான சமீபத்திய முயற்சியாக, 7 பிப்ரவரி 2025 அன்று, மாவட்டக் கல்வி அதிகாரி (DEO) மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பள்ளிகளின் வருகைப்பதிவை மேம்படுத்துதல் மற்றும் மாவட்டத்தின் பள்ளிகளில் ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் திட்டமோ, உத்தரவுகளோ இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Sunday, February 16, 2025
New
எந்த அரசுப் பள்ளியையும் மூடும் திட்டம் இல்லை - பள்ளிகளை மேம்படுத்தவே ஆய்வுக் கூட்டம்: கல்வி அதிகாரி விளக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.