மார்ச் 4 ஆம் தேதி 5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 2, 2025

மார்ச் 4 ஆம் தேதி 5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு



மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மார்ச் 4ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மேல்மலையனூர் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 4 ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்தூல் ரஹ்மான் உத்தரவு ! மார்ச் 15 ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு .

மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம்

அய்யா வைகுண்ட சாமி பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 4, 2025 அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் மாற்றமின்றி நடைபெறும்.

உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் (15.03.2025) சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மார்ச் 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

அய்யா வைகுண்டரின் அவதார நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டத்துக்கு மார்ச் 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு அவரது அவதார நாளன்று பெருந்திரளாக மக்கள் வருகை தருவது வழக்கம்.

இதையொட்டி, கன்னியாகுமரி மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதோப்புக்கு வருகை தருவர்.

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்துக்கு மார்ச் 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்று(பிப். 20) உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடுசெய்ய மார்ச் 15-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாவட்டத்திற்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம்

நான்கு மாவட்டத்திற்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம்

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி அவதார நாளையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்திற்கும் மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசாமி அவதார நாளன்று தலைமைப்பதிக்கு கன்னியாகுமரி மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்ககளிலும் தமிழகம் முழுவதிலுமிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமித்தோப்புக்கு வருகை தருவர். இந்த நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு மார்ச் 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்திற்கும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.

அதன்படியே, மார்ச் 4 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் கூறியுள்ளார்.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 15.03.2025 (சனிக்கிழமை) அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாள் என்றும் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.