திருப்பத்தூர் கலெக்டரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 30, 2025

திருப்பத்தூர் கலெக்டரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

Teachers protest against Tirupattur Collector - திருப்பத்தூர் கலெக்டரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் -


திருப்பத்தூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், கலெக்டர் அலுவலருத்தில் கலெக்டர் தர்ப்பக ராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்றுமாலை மணிமுதல் இரவு 8.30 மணிவரை நடந்தது. இதில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவ, மாணவி கனின் தேர்ச்சி விகிதத்தை அதிக ரிப்பது.இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, நாட்றம்பள்ளியில் புதிதாக தொடங் உள்ள மாணவர்களின் சோசு ஐடியற்றும் கல்வித்துறை சார்ந்த பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அப்போது கலெக்டர் தர்ப்பக ராஜ் பேசும்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண் ணியகோட்டி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மலைவாசன், மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் வெங்கடேச பெருமாள், ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் ஆசி ரியர்களை கலெக்டர் தரக்குறை வாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஆசிரியர் வளமைய பயிற்றுனர்கள், ஆண், பெண் அரசு ஆசிரியர்கள் என 60க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவ ட்ட கல்வித்துறை உயர் அதிகாரி களை கலெக்டர் தர்ப்பகராஜ் தரக் குறைவாக பேசியதை கண்டித்து, அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் வெற்றிவேல், செயலாளர் மலையன் ஆகியோர் தலைமையில் ஆசிரியர்கள் கலெக் டர் அலுவலக வளாகத்தில் உள்ள படிக்கட்டுகளில் அமர்ந்து கலெக்ட குக்கு எதிராக கோஷங்களை எழு. ப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பத்தூர் டவுன் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவ டிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் முதன்மைகல்வி அலு நீ வலர் புண்ணியக்கோட்டி இங்கு வரவேண்டும் எனக்கூறினர். தொட் ர்ந்து போலீசார் அவருக்கு தகவல் அளித்தனர். சிறிது நேரத்தில் மாவ ட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து ஒன்றரை மணி நேரம் நடந்த போராட்டத்தை கைவிட்டு எல்லாரும் அங்கிருந்து சுலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.