கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை
விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியின் கீழ் இயங்கும் ஊரக வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள 108 குரூப் C பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
என்ன பணியிடம், அதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை போன்ற அனைத்துத் தகவல்களையும் இந்த செய்தித் தொகியூப்பில் தெரிந்து கொள்ளலாம் . அலுவலக உதவியாளர் (Group C)
சம்பளம்: மாதம் Rs.35,000/-
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 108
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST - 5 ஆண்டுகள், OBC - 3 ஆண்டுகள்,
PwBD (Gen/ EWS) - 10 ஆண்டுகள்,
PwBD (SC/ ST) - 15 ஆண்டுகள்,
PwBD (OBC) - 13 ஆண்டுகள்
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர் .
: மலேசியாவில் வேலை.. ₹80 ஆயிரம் வரை சம்பளம்.. 10வது பாஸ் ஆகியிருந்தாலே விண்ணப்பிக்கலாம்.. தமிழ்நாடு அரசு ஏற்பாடு.. விவரம் இதோ எப்படி விண்ணப்பிப்பது ?
தகுதிதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.nabard.org/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2024
குறிப்பு :
இந்த பணியிடத்துலகு தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியாவின் எந்த பகுதிரிலும் பணியமர்த்தப்படலாம் . அதை மனதில் கொண்டு அதற்கு இணங்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.