அனைத்து வகைப் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 9, 2024

அனைத்து வகைப் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு!



அனைத்து வகைப் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு! Avoid taking special classes in all types of schools - Chief Secretary orders District Collectors!

தமிழ்நாட்டில் தற்போது கடுமையான வெப்பம் நிலவுவதால் அனைத்து வகைப் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு! வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் [பே.மே.3{1)] துறை, தலைமைச்செயலகம், சென்னை -09. Dept. e-office Tappal ID: PANNEERSEELVAM M.-ASST1(TAPPAL). REV.SECTT.

கடித எண்.4068/பே.மே.3(1)/2024-2, நாள் 09.05.2024

திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப.,

அரசு தலைமைச் செயலாளர்.

பெறுநர்

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்.

அய்யா/அம்மையீர்,

பொருள்: பேரிடர் மேலாண்மை வெப்ப அலை - தற்போது தமிழ்நாட்டில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால் சிறுவர் சிறுமியரின் நலன் கருதி கோடைவிடுமுறை நாட்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் தவிர்த்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல்- தொடர்பாக.

பார்வை: 1) அரசு கடித 09.05.2024. எண்.4068/பே.மே.3(1)/2024-1,

நாள் 2) கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் அவர்களின் 09.05.2024. மற்றும் மாநில நிவாரண ஆணையர் ந.க.எண்.இ.இ.II(1)/7162822/2024. நாள் பார்வையில் ஈர்க்கப்படுகிறது.

காணும் கடித தொடர்புகளின் மீது தங்கள் கவனம் 2. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கோடை காலத்திற்கான வெப்ப அலை குறித்த அறிவிக்கையில், நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்பப் பகுதிகளில் மார்ச் முதல் மே 2024 வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்றும், வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில், வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3-5° C வரை அதிகமாக பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வெப்ப அலையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்திட வேண்டிய மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையிலும், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் தலைமையிலும் பல்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

4. இந்நிலையில், எதிர்வரும் 16.05.2024 முடிய, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-40° C வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5. எனவே. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால், பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து சிறுவர் சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். இதனை உறுதி செய்யுமாறு அனைத்து ஆட்சித்தலைவர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD Chief Secretary Lr to All District Collectors Letter PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.