நுழைவு தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகளில் மோசடி செய்வோருக்கு 10 ஆண்டு சிறை, அபராதம் - பாராளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 6, 2024

நுழைவு தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகளில் மோசடி செய்வோருக்கு 10 ஆண்டு சிறை, அபராதம் - பாராளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்

நுழைவு தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகளில் மோசடி செய்வோருக்கு 10 ஆண்டு சிறை, அபராதம் - பாராளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்



இனி நுழைவு தேர்வு, பொதுத் தேர்வுகளில் மோசடி செய்வோருக்கு 10 ஆண்டு சிறை; ரூ.1 கோடி அபராதம் நுழைவுத்தேர்வு, பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 கோடி அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்டத்துக்கான மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பொதுத் தேர்வுகளில் மோசடி செய்வோருக்கு 10 ஆண்டு சிறை

நுழைவு தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகளில் மோசடியில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும், புதிய மசோதா நேற்று (பிப்ரவரி 5) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் பிறகு பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று காலை பாராளுமன்றம் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நுழைவுத் தேர்வு..

ஆண்டுதோறும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், பொறியியல் நுழைவுத் தேர்வான ஜே.இ இ, கலை அறிவியல் கல்லூரிகளுக்கு நடத்தப்படும் க்யூட் தேர்வு. ஐஏ எஸ். ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள், எஸ்.எஸ்.சி, ரயில்வே பணிகள் உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

10 ஆண்டுகள் சிறை

வடமாநிலங்களில் இந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள் கசியும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால் தகுதியான மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தடுக்கும் வகையில் நுழைவுத்தேர்வு, பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 கோடி அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்டத்துக்கான (Prevention of Unfair Means Bill 2024) மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றுப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பின் சட்டமாகும். ரூ.1 கோடி அபராதம்

இந்த மசோதாவின்படி வினாத்தாள் கசியவிடும் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும். திட்டமிட்ட குற்றங்களுக்கு 5 முதல் 10 ஆண்டு வரையும், ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்கவும் புதிய மசோதாவில் வழிவகை செய்யப் பட்டுள்ளது. மேலும் வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் மோசடி செய்தாலும் 10 ஆண்டுகள் தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.