திருச்சிராப்பள்ளி முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
பொருள்
தேர்வுகள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் 2023-2024ஆம் கல்வி ஆண்டு-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடைபெறுதல் சார்பு.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2023-2024ஆம் கல்வி ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு 07.022024 முதல் தொடங்கி 16.02.2024 வரை நடைபெற உள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் நடைபெற உள்ள இரண்டாம் திருப்புதல் தேர்விற்கான கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. கால அட்டவணை குறித்து அனைத்து மாணவர்களுக்கு தெரிவித்து தேர்விற்கு தயார் செய்திட அனைத்து வகை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளி முதல்வர்கள் வினாத்தாட்களை தேர்வன்று அத்தேர்வு கால அட்டவணையின்படி வினாத்தாள் மைய பள்ளிகளிலிருந்து காலை பெற்று தேர்வுகளை மந்தணத் தன்மையுடன் நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.
இணைப்பு:தேர்வுகால அட்டவணை
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.