மாணாக்கர்கள் பாதுகாப்பு மற்றும் உடல் நலன் கருதி, பருவ மழை பெய்யும் போது, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தம் சொந்த விருப்பத்தின் பேரில் பள்ளி விடுமுறை துய்த்துக் கொள்ளலாம் - Proceeding - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 1, 2023

மாணாக்கர்கள் பாதுகாப்பு மற்றும் உடல் நலன் கருதி, பருவ மழை பெய்யும் போது, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தம் சொந்த விருப்பத்தின் பேரில் பள்ளி விடுமுறை துய்த்துக் கொள்ளலாம் - Proceeding

For the safety and health of the students, parents may waive school holidays for their children during monsoons at their own discretion - Proceeding - மாணாக்கர்கள் பாதுகாப்பு மற்றும் உடல் நலன் கருதி, பருவ மழை பெய்யும் போது, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தம் சொந்த விருப்பத்தின் பேரில் பள்ளி விடுமுறை துய்த்துக் கொள்ளலாம் - Proceeding

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தூத்துக்குடி

சுற்றறிக்கை


தூத்துக்குடி மாவட்டம், அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் பாதுகாப்பு மற்றும் உடல் நலன் கருதி, பருவ மழை பெய்யும் போது, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தம் சொந்த விருப்பத்தின் பேரில் பள்ளி விடுமுறை துய்த்துக் கொள்ளலாம் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்திட தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கும் பட்சத்தில், மாநகராட்சி நகராட்சி / ஊராட்சி நிர்வாகத்தினை உடனடியாக தொடர்பு கொண்டு தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்திட தலைமை ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்திட வேண்டும். பள்ளிக்கு வரும் பாதைகளில் மழை நீர் வெள்ளம் அல்லது மழை சூழ்ந்து கொண்டிருக்கும்பட்சத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக மாணாக்கர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் பள்ளிக் வருகைபுரிவதை தடுத்து பாதுகாத்திடவும், மாணவர்கள் அப்பகுதிக்கு வராத வண்ணம் கண்காணித்திடவும் தலைமை ஆசிரியர்/முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.