CPS ஒழிப்பு இயக்கத்தோடு கரம் கோர்த்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 8, 2023

CPS ஒழிப்பு இயக்கத்தோடு கரம் கோர்த்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள்



Tamil Nadu State Transport Corporation workers join hands with CPS abolition movement - CPS ஒழிப்பு இயக்கத்தோடு கரம் கோர்த்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள்

2003ம் ஆண்டிலிருந்து நியமனமாகிப் பணிபுவோருக்கும் பணியில் இறந்தோர் குடும்பத்தினருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்கக் கோரும் ஒன்றுபடும் இயக்கம்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அல்லது புதிய ஓய்வூதிய திட்டம் CPS=Contribution Pension System (or) NPS=New Pension System ஏன் பழைய ஓய்வூதியத் திட்டமாக மாற்ற வேண்டும்?

சோக வரலாறு

புதிய ஓய்வூதியத் திட்டம் அல்லது ஏமாற்றுத் திட்டம் 2003க்கு பின் பணிக்கு வந்த அரசு ஊழியர்கள் அரசு சார்ந்த பொதுத் துறை ஊழியர்கள் அனைவருக்குமான திட்டம் ஆகும். இப்புதிய ஓய்வூதிய திட்டத்திற்காக தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பணம் எங்கிருக்கிறது? என்ன வடிவத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்களை மாநில அரசோ! ஒன்றிய அரசோ! இதுவரை வெளிப்படையாகத்தெரிவிக்கவில்லை. CPS- திட்டம் என்ற ஏமாற்றுத் திட்டத்தால் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் மருத்துவத் தகுதி இழப்பு & தன் விருப்ப ஓய்வு பெற்றோர்களும் பணியில் உள்ளபோதே இறந்து போன தொழிலாளர்களுக்கும் குடும்பங்களுக்கும் ஓய்வு பெற்றோரின் குடும்பத்தாருக்கும் எந்தவித பணப்பலனும் கிடைக்கவில்லை.

இதனால் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தங்களது வாழ்வாதாரங்களை இழந்தும், பலர் இறந்தும் போய்விட்டார்கள். பொறுப்பான அரசுகளின் பொறுப்பற்ற தன்மை CPS- திட்டம் குறித்து நாளது தேதி வரை அரசுகள் திட்டத்தின் செயல் நடவடிக்கை குறித்து முழுமையான விளக்கங்களை வெளிப்படையாக அறிவிக்க வில்லை,

நம்மை பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்:

1. பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் உள்ள தொழிலாளர்கள் பணி ஓய்வு பெறும்போது தற்போது பெறுகின்ற சம்பளத்தில் 50% ஓய்வூதியமாகப் பெற முடியும். இது உத்திரவாதமுள்ள ஓய்வூதியமாக இருப்பதாலும் முதுமைகாலத்தில் நம்பகமான வாழ்வாதாரமாக விளங்குவதாலும் பழைய ஓய்வூதியத்திட்டத்தில் நம்மையும் இணைத்து அனைவருக்குமான ஓய்வூதிய திட்டமாக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

2. 2003க்கு முன்பே பணியிலிருந்த தொழிலாளர்களில் சிலர் பணியில் உள்ள போதே இறந்து போனவர்களின் குடும்பத்தினர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், இனிமேல் பணிஓய்வு பெற இருப்பவர்கள், ஏற்கனவே பழைய பென்சன் திட்டத்தின் வழியே பென்சன் பெறுகின்றவர்கள், அனைவருமே தொடர்ந்து பழைய பென்சன் திட்டத்தில் பென்சன் பெற வேண்டுமானால் CPS திட்டமான புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்படவேண்டும் இல்லையென்றால் பழைய பென்சன் திட்டம் பணமின்றி ஆபத்தில் சிக்கிவிடும்.

3. 2021ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வாக்குறுதி எண்: 309ன் படி புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வோம் என்று வாக்குறிதியளித்தது. அனைத்து துறை தொழிலாளர்களும் இந்த வாக்குறிதியை நம்பி வாக்களித்ததன் அடிப்படையில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த தி.மு.க. அரசு, CPSசைப் பற்றி இதுவரை எதுவும் பேசவில்லை. ஆகவே தொழிலாளர்கள் CPSன் ஆபத்தை உணர்ந்து அனைத்து தொழிலாளர்களும் ஒற்றுமையோடு CPSசை ஒழிக்கவும் பழைய ஓய்வூதிய திட்டம் மூலம் ஓய்வூதிய உரிமை கிடைக்கும் வரை ஓயமாட்டோம்! என்கிற உறுதியேற்போம்! இதற்காகப் போராடும் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான CPS ஒழிப்பு இயக்கத்தோடு இணைந்து போராடுவோம்! அனைத்து போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களும் போராட்டக்களத்தல் இறங்கிப் போராடவும் ஆதரவளித்திடவும் உரிமையோடு அழைக்கின்றோம். வருக! வருக!

முக்கிய குறிப்பு:

CPS ஒழிப்பு இயக்கம் என்பது எந்தச் சங்கத்துடனும் இணைக்கப்பட்ட இயக்கமல்ல இது கட்சி சார்பற்ற இயக்கமாகும்.

CPS ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றைக்கோரிக்கைக்காக துவக்கப்பட்டுள்ள இயக்கம்.

பணிபுரியும்அனைவரையும் ஒருங்கிணைக்கும் இயக்கம்தான் இந்த CPS ஒழிப்பு இயக்கம்.

CPS ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் பழைய ஓய்வூதியத்திட்டம் அமலான உடன் இந்த CPS ஒழிப்பு இயக்கம் கலைக்கப்படும்.

CPS ஒழிக்கப்பு இயக்கத்திற்கு ஆதரவு தர அனைவரையும் வரவேற்கிறோம்

எங்கள் அழைப்பை ஏற்று ஆதரவு தர நீங்கள் செய்யவேண்டியது

உங்கள் பெயர், பணி, பணி எண், பணிபுரியும் கிளை, தொடர்பு எண் & வாட்ஸ்சப் எண் போன்ற தகவலோடு தொடர்பு கொள்க.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.