அரசுப் பள்ளிகளின் தரம், சுய மதிப்பீடு குறித்த ஆய்வு - 30-ந் தேதிக்குள் முடிக்க உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, September 10, 2023

அரசுப் பள்ளிகளின் தரம், சுய மதிப்பீடு குறித்த ஆய்வு - 30-ந் தேதிக்குள் முடிக்க உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரம், சுயமதிப்பீடு குறித்த ஆய்வு - 30-ந் தேதிக்குள் முடிக்க உத்தரவு

2016-17-ம் கல்வியாண்டு முதல் அரசுமற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளை மேம்படுத்த அந்த பள்ளிகளின் தரம் மற்றும் மதிப்பீடு ஆய்வு செய்வதற்கு தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக மையம் (என்.ஐ.இ.பி.ஏ.) தேசிய அளவிலான பள்ளிகளின் தரம் மற்றும் மதிப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் நடப்பாண்டுக்கான ஆய்வு பணிகள் வருகிற 30-ந் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு தேவை யான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை அறிவுறுத்தி இருக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.