நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - முதன்மை கல்வி அலுவலர் ஆஜராக உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 21, 2023

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - முதன்மை கல்வி அலுவலர் ஆஜராக உத்தரவு.



நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - முதன்மை கல்வி அலுவலர் ஆஜராக உத்தரவு. Contempt of court case - Order to appear by Principal Education Officer.

நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு

நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

2019உத்தரவை நிறைவேற்றாமல் தற்போது அவசர அவசரமாக 10ஆம் தேதி நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றியுள்ளார் இதை ஏற்க முடியாது அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் நீதிபதி உத்தரவு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்

இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பாக விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அதில் " அரசு பணியாளராகிய தனக்கு வழங்க வேண்டிய பண பலன்களை முறையாக வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2019 ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன் இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி எனக்கு பண பலன்களை வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.