வீட்டுப்பாடம் எழுதவில்லை என ஆசிரியை பிரம்பால் அடித்ததில் 4-ம் வகுப்பு மாணவி காயம் - போலீசில் பெற்றோர் புகார் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 30, 2023

வீட்டுப்பாடம் எழுதவில்லை என ஆசிரியை பிரம்பால் அடித்ததில் 4-ம் வகுப்பு மாணவி காயம் - போலீசில் பெற்றோர் புகார்

வீட்டுப்பாடம் எழுதவில்லை என ஆசிரியை பிரம்பால் அடித்ததில் 4-ம் வகுப்பு மாணவி காயம்

போலீசில் பெற்றோர் புகார்


தண்டையார்பேட்டை, ஜூலை.30- சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 8 வயது மாணவி, சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் ஆங்கில வகுப்பு ஆசிரியை, வீட்டுப்பாடம் எழுத வில்லை எனக்கூறி மாணவியை பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவியின் கைகள் மற்றும் காதில் லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவியை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். அங்கு மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் தண்டை யார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.