மாணவர்களுக்கு வேண்டாமே மாடல் கட்டிங் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு வேண்டுகோள்
மாணவர்கள் யாக முடிவெட்டி கொள்ள வேண்டும் மாடல் கட் டிங் தேவையில்லை என தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மாநில துணை தலைவர் விஜய் சலுார் உரிமையாளர்களுக்கும், பெற்றோருக்கும் வேண்டு கோள் விடுத்துள்ளார். தற்போது உள்ள சூழ லில் மாணவர்கள் வித விதமான தலை அலங் காரம் செய்து கொண்டு பள்ளிக்கு வருகின்றனர். மாணவர்களின் எண்ண பிரதிபலிப்புகள் அவர்கள் செய்யும் அலங்காரத்தில் ஒளிந்து இருக்கின்றது. பழைய காலத்தில் மாண வர்கள் சீராக முடி வெட்டி ஜோராக பள்ளிக்கு வருவர். அன்றைய மாணவர் களிடம் ஒழுக்கமும் எதிர் பார்க்க முடிந்தது.ஆனால் இன்றைக்கு ஒழுக்கம் சார்ந்த நெறிமுறைகள் பிறழ்ந்ததற்கு இந்த முடி அலங்காரம் ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றது. ஒன் சைடு கட்டிங், பாக்ஸ் கட் டிங், மஸ்ரூம் கட்டிங் இது போன்ற பல்வேறு வகை யான முறையில் முடியை வெட்டிக் கொண்டு, முறையில்லாமல் வருவ தால் பள்ளிக்கூடத்தில் ஒரு ஒழுங்கீனமான சூழல் ஏற் படுகிறது.
அரசு, பெற்றோர்கள் மற்றும் சிகை அலங்கார நிபுணர்கள் இந்த விஷயத் தில் அக்கறை செலுத்த இது குறித்து, தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் விஜய் கூறியதாவது:
அனைத்து சலூன் உரி மையாளர்களுக்கும், பெற்றோருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல் லூரிகளில் படிக்கும் மாண வர்களுக்கு பாக்ஸ் கட்டிங், கிராஸ் கட்டிங், ஒன்சைடு கட்டிங், ஸ்டைல் கட்டிங், மாடலிங் கட்டிங் என எது வும் வெட்ட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். பெற் றோர்களும் இதற்கு முழுஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.