இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் புதிதாக பல பாடப்பிரிவுகள் தமிழ்நாட்டில் அறிமுகம் - அதிகாரிகள் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 15, 2023

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் புதிதாக பல பாடப்பிரிவுகள் தமிழ்நாட்டில் அறிமுகம் - அதிகாரிகள் தகவல்

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் புதிதாக பல பாடப்பிரிவுகள் தமிழ்நாட்டில் அறிமுகம் - அதிகாரிகள் தகவல் - Many new courses have been introduced in Tamilnadu as per today's times - officials inform

அரசு உதவி பெறும் பல கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவு

தற்போதைய கால கட்டத்திற்கு ஏற்றார்போல் பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் பல கல்லூரிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்துள்ளது. தற் போது எந்த கல்லூரியில், எந்த துறையை எடுக்கலாம் என மாணவ-மாணவிகள் யோசித்து கொண்டுள்ளனர். பெற்றோ ரும் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர் காலத்தை அமைத்து கொடுக்க யோசித்து கொண்டிருக்கின்றனர். மாணவ-மாணவி கள் பலரும் மே 7ம் தேதி நடைபெற இருக்கும் நீட் தேர்வுக்கு, தங்களை தயார் படுத்தி வருகின்றனர். அதேபோல் கலை மற்றும் அறிவியல், இன் ஜினியரிங் படிப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண் டில், இன்ஜினியரிங் படிப் புக்கு என்ன டிமாண்ட் இருந்ததோ, அதே அளவுக்கு கலை மற் றும் அறிவியல் படிப் புக்கும் இருந்தது. அந்த அள விற்கு மாணவர்கள் போட்டி போட்டு கொண்டு கல்லூ ரிகளில் சேர்ந்தனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி களை பொறுத்தவரை, பி.காம். பி.சி.ஏ. பி.பி.ஏ மற்றும் பி.ஏ போன்ற பாடப்பிரிவுக ளைத்தான் மாணவர்கள் தேர்வு செய்கின் றனர். இவை மட்டுமல்லாமல் தற்போது உள்ள காலகட்டத்துக்கு ஏற்றார்போல் வேலை வாய்ப்பினை எளிதில் பெறும் பல புதுவிதமான பாடப்பிரிவுகளும் பல கல்லூரிகளில் உள்ளன. அதனை மாணவர்கள் சரியான முறையில் பயன்ப டுத்தி தங்களுக்கான துறையை தேர்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி முதல்வர் ரம்யா கூறுகையில், “நவீன காலகட் படத்திற்கு ஏற்ற வகையில் இது போன்ற புதிய படிப்புகள் மாணவர் களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனி யார் என இரு பிரிவு மாணவர்களுக்கும் வகுப்பு கள் தனித்தனியாக நடைபெற்று வருகிறது. அரசு உதவிப்பெறும் மாண வர்களுக்கு அவர்களுக்கான உதவித் தொகை எளிதில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்து தருகிறோம். அதே போல் சுயநிதி பிரிவில் படிக்கும் மாண வர்களில் பொருளாதாரத்தில் பின்தங் கியவர்களுக்கு கல்லூரி கட்டணத்தில் 15% வரை குறைத்து உதவிகள் செய்து வருகிறோம். மேலும் இதுபோன்ற மாண வர்களுக்கு அன்னப்பூரணி திட்டத்தின் கீழ் உணவுகளும் வழங்கி வழங்கி வரு கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.