மனஅழுத்தத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 16, 2023

மனஅழுத்தத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!!

மனஅழுத்தம் போக்குங்கள்!

திருச்சி மாவட்டத்தில் ஒரு பள்ளி வளாகத்துக்குள் 10ம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் இறந்துள்ளான். இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது, ஆசிரியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, வேலூர் மாவட்டம் பள்ளி ஒன்றில் பைக்கில் வந்த மாணவனை கண்டித்த ஆசிரியரை தனது தந்தை முன்னிலையே மாணவன் தரக்குறைவாக பேசும் வீடியோ வெளிவந்துள்ளது. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள இடை வெளியை காட்டுகிறது. இதற்கு காரணம், ஆசிரியர்களுக்கு இடைவிடாமல் வேலை தரப்படுகிறது. இதனால், மாணவர்களிடம் மனம் விட்டு பேச முடியாத சூழல் நிலவுகிறது. ஆசிரியர்கள், மாணவர்களிடம் மட்டுமே தங்கள் நேரத்தை செலவிடும் சூழலை உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்களுக்கிடையேயான சண்டை மட்டுமல்ல பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இடையே கூட இனி அடிதடி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அத்தனை மனஅழுத்தத்தில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.