எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் நிறைவு விழா - பத்திரிகையாளர் அழைப்பு - பள்ளிக்கல்வி ஆணையர் செய்திக் குறிப்பு - நாள்:21/03/2023 Numeracy Celebration Closing Ceremony - Press Call - Commissioner of School Education Press Release - Date: 21/03/2023
ஆணையர் பள்ளிக் கல்வி.
செய்திக் குறிப்பு - நாள்:21/03/2023 பத்திரிகையாளர் அழைப்பு
எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் நிறைவு விழா
கொரோனா பெறுந்தொற்றுக் காலத்தில் பள்ளிகள் இயக்க முடியாத சூழலில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்யவும் கற்றல் கற்பித்தல் முறையை எளிமையாக்கவும் இல்லம் தேடிக் கல்வி உட்பட பல திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. திறனை வலுப்படுத்த உருவான திட்டம் 'எண்ணும் எழுத்தும்'. இத்திட்டம் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் 16 லட்சம் குழந்தைகளின் கற்றல் தொடங்கப்பட்டு ஒராண்டு நிறைவு பெறுவதையொட்டி 'எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் மார்ச் 17, 2023 அன்று தொடங்கி மாவட்டம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 'எண்ணும் எழுத்தும்' திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பரப்புரை வாகனத்தில் வீதி வீதியாக சென்று, பரப்புரை மேற்கொண்டனர்.
கற்றலைக் கொண்டாடுவோம்' நிகழ்ச்சியின் நிறைவு விழாவாக 2023 மார்ச், 20,21 ஆகிய தேதிகளில் முதன் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் ஆரம்பப் பள்ளிகளில், எண்ணும் எழுத்தும் வகுப்பறையை பெற்றோர்கள் பார்வையிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நிகழ்வுக்கு தங்கள் நிறுவனத்தில் இருந்து செய்தியாளர்களை அனுப்பி வைக்கும்படி அன்போடு வேண்டுகிறோம்.
ஆணையர் பள்ளிக் கல்வி.
செய்திக் குறிப்பு - நாள்:21/03/2023 பத்திரிகையாளர் அழைப்பு
எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் நிறைவு விழா
கொரோனா பெறுந்தொற்றுக் காலத்தில் பள்ளிகள் இயக்க முடியாத சூழலில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்யவும் கற்றல் கற்பித்தல் முறையை எளிமையாக்கவும் இல்லம் தேடிக் கல்வி உட்பட பல திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. திறனை வலுப்படுத்த உருவான திட்டம் 'எண்ணும் எழுத்தும்'. இத்திட்டம் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் 16 லட்சம் குழந்தைகளின் கற்றல் தொடங்கப்பட்டு ஒராண்டு நிறைவு பெறுவதையொட்டி 'எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் மார்ச் 17, 2023 அன்று தொடங்கி மாவட்டம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 'எண்ணும் எழுத்தும்' திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பரப்புரை வாகனத்தில் வீதி வீதியாக சென்று, பரப்புரை மேற்கொண்டனர்.
கற்றலைக் கொண்டாடுவோம்' நிகழ்ச்சியின் நிறைவு விழாவாக 2023 மார்ச், 20,21 ஆகிய தேதிகளில் முதன் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் ஆரம்பப் பள்ளிகளில், எண்ணும் எழுத்தும் வகுப்பறையை பெற்றோர்கள் பார்வையிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நிகழ்வுக்கு தங்கள் நிறுவனத்தில் இருந்து செய்தியாளர்களை அனுப்பி வைக்கும்படி அன்போடு வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.