ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு குறித்து, இன்று கருத்து கேட்பு கூட்டம் ! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 9, 2023

ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு குறித்து, இன்று கருத்து கேட்பு கூட்டம் !

சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கை தொடர்பான முதற்கூட்டம் - 10.03.2023 அன்று நடைபெறுகிறது. முதற்கட்டமாக இரு சங்கங்களுக்கு அழைப்பு குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு குறித்து, இன்று கருத்து கேட்பு கூட்டம் !

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு குறித்து, இன்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக, 2009 ஆகஸ்ட் 1க்கு முன் நியமிக்கப்பட்டோருக்கும், அதற்கு பின் நியமிக்கப்பட்டவர்களுக்கும் சமமான ஊதியம் வழங்க, இடைநிலை ஆசிரியர் பதிவுமூப்பு இயக்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.

இதுகுறித்து, அரசு தரப்பில் பேச்சு நடத்தி, சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக ஆய்வு செய்ய, அரசின் சார்பில் கமிட்டி அமைக்கப்பட்டது.

கமிட்டி சார்பில், பள்ளிக் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, இன்று ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த உள்ளார்.

தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க பிரதிநிதிகள், இன்றைய கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.