பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் 20.02.2023 முதல் 25.02.2023 வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 15, 2023

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் 20.02.2023 முதல் 25.02.2023 வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் 20.02.2023 முதல் 25.02.2023 வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு! - Amendments can be made in the name list of students appearing for Class 10 Public Examination from 20.02.2023 to 25.02.2023 - Directorate of State Examinations Notice!

பார்வை-1 ல் காணும் இவ்வலுவலக கடிதத்தில், அனைத்து உயர்நிலை /மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் 17.02.2023 பிற்பகல் முதல் www.dge1.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்கள் பள்ளிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி, ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தங்கள் பள்ளி மாணாக்கர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

தற்போது, மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை /மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றி ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான பெயர்ப்பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1. பார்வை 2-ல் காணும் உச்சநீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள மொழி சிறுபாண்மையினர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதி-1ல் தமிழ்மொழிக்கு பதிலாக அவரவர் தாய்மொழிகளில் 2023ஆம் ஆண்டில் பகுதி 1-ல் தேர்வெழுத தீர்ப்பாணை பெறப்பட்டுள்ளது. அவ்வாறான சிறுபாண்மையினர் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணாக்கர்கள் பகுதி1-ல் தமிழ் மொழிக்கு பதிலாக அவரவர் தாய்மொழிகளில் தேர்வெழுதவும் மற்றும் அரசாணை (நிலை) எண்.37, பள்ளிக் கல்வி (க.ஆ.ப) துறை, நாள்.06.03.2018-ன்படி பிற மாநிலத்தில் பயின்ற மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு கல்வி பாடத்திட்டத்தில் அல்லாமல் தமிழ்நாட்டில் பிற கல்வி பாடத்திட்டத்தில் (CBSC, ICSE) பயின்ற மாணவர்கள் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தமிழ்நாடு கல்வி பாடத்திட்டத்தில் சேர்ந்து பயிலும் மாணவர்கள் ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பகுதி1-ல் பிற மொழிப்பாடத்தில் தேர்வெழுதுவதற்கு அனைத்து உயர்நிலை/ மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

2. ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தங்கள் பள்ளி மாணாக்கர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் (பெயர், பிறந்த தேதி, தாய்/தந்தை/பாதுகாவலர் பெயர், புகைப்படம். பகுதி-1 மொழிப்பாடம் உட்பட) இருப்பின், 20.02.2023 முதல் 25.02.2023 வரையிலான நாட்களில் பள்ளித் தலைமையாசிரியர்கள் EMIS PORTAL- லில் Nominal Roll பகுதிக்குச் சென்று அத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

3. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அறிவிக்கப்படும் நாட்களில் EMIS PORTAL-லில் மேற்கொண்ட திருத்தங்கள் மட்டுமே DGE PORTAL- லில் Update செய்ய இயலும் என்பதால், அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

4. மாணாக்கரின் அனைத்து வகையான திருத்தங்களும் EMIS PORTAL- லில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

5. மேற்குறிப்பிட்ட நாட்களில் EMIS PORTAL-லில் மேற்கொண்ட திருத்தங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு. DGE PORTAL-லில் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள பின்னர் வாய்ப்பு வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.