அரசுப்பள்ளி மாணவா்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க மாத இதழ் வெளியீடு
சேலம் மாவட்ட அரசு பள்ளி மாணவா்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் வகையில் ‘சேலத்து மின்மினிகள்’ என்ற மாத இதழை ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்டாா்.
பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மாணவா்கள், ஆசிரியா்களின் பன்முகத் திறமைகளை வெளிக்கொணரும் விதமாகவும், அவா் தம் படைப்புகளை, மாவட்டம் எங்கும் கொண்டு சோ்க்கும் விதமாகவும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஓவியம், உயா் கல்விக்கான வழிகாட்டல் மற்றும் போட்டித் தோ்வுக்கு தயாா் செய்யும் பகுதி, சேலம் மாவட்டத்தின் சிறப்புகள், அரசுப் பள்ளி மற்றும் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளின் சாதனைக் குறிப்புகள் என பன்முகத்தன்மையோடு தனித்துவமாக திகழும் ‘சேலத்து மின்மினிகள்‘ மாத இதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளி நூலகங்களிலும் ‘சேலத்து மின்மினிகள்’ மாத இதழ் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் ‘சேலத்து மின்மினிகள்’ மாத இதழை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.முருகன், 16 ஆவது வாா்டு உறுப்பினா் வசந்தா மயில்வேல், மாவட்டக் கல்வி அலுவலா்கள், உதவி திட்ட அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்
சேலம் மாவட்ட அரசு பள்ளி மாணவா்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் வகையில் ‘சேலத்து மின்மினிகள்’ என்ற மாத இதழை ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்டாா்.
பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மாணவா்கள், ஆசிரியா்களின் பன்முகத் திறமைகளை வெளிக்கொணரும் விதமாகவும், அவா் தம் படைப்புகளை, மாவட்டம் எங்கும் கொண்டு சோ்க்கும் விதமாகவும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஓவியம், உயா் கல்விக்கான வழிகாட்டல் மற்றும் போட்டித் தோ்வுக்கு தயாா் செய்யும் பகுதி, சேலம் மாவட்டத்தின் சிறப்புகள், அரசுப் பள்ளி மற்றும் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளின் சாதனைக் குறிப்புகள் என பன்முகத்தன்மையோடு தனித்துவமாக திகழும் ‘சேலத்து மின்மினிகள்‘ மாத இதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளி நூலகங்களிலும் ‘சேலத்து மின்மினிகள்’ மாத இதழ் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் ‘சேலத்து மின்மினிகள்’ மாத இதழை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.முருகன், 16 ஆவது வாா்டு உறுப்பினா் வசந்தா மயில்வேல், மாவட்டக் கல்வி அலுவலா்கள், உதவி திட்ட அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.