ஆசிரியர்களின் ஆசிரியர் வைப்பு நிதி கணக்குத்தாள்கள் (Account Slips) - 2015 முதல் வழங்கப்படாமை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கக் கோருதல் தொடர்பாக - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 27, 2023

ஆசிரியர்களின் ஆசிரியர் வைப்பு நிதி கணக்குத்தாள்கள் (Account Slips) - 2015 முதல் வழங்கப்படாமை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கக் கோருதல் தொடர்பாக

பெறுநர்

மதிப்புமிகு மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி)அவர்கள்,

மாவட்டக் கல்வி அலுவலகம் வேலூர்,

அன்புடையீர் வணக்கம்:

பொருள்: வேலும் மாவட்டம் குடியாத்தம் கூட்டாரக் கல்வி அலுவலகம் அரசு நிதியுதவிப் பள்ளி ஆசிரியர்களின் ஆசிரியர் வைப்பு நிதி கணக்குத்தாள்கள் (Account Slips) - 2015 முதல் வழங்கப்படாமை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கக் கோருதல் தொடர்பாக

குடியாத்தம் ஒன்றியத்தில் சுமார் நிதியுதவிப் 22 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 160 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 74 ஆசிரியர்கள் TPF கணக்கை வைத்துள்ளனர். ஆனால் இவர்களுக்கு 2018 ஆண்டு முதல் கணக்குத்தாள்கள் (Account Slips) வழங்கப்படவில்லை, தற்போது இருக்கும் வட்டாரக் கல்வி அலுவலர்களை கேட்கும்போது கண்ளணிப்பாளர் கையெழுத்து போடவில்லை எழுத்தர் கையெழுத்து போடவில்லைநாங்கள் என்ன செய்வது என்று கைவிரிக்கிறார்கள், இதனால் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, குடியாத்தம் வட்டார நிதியுதவி பள்ளி ஆசிரியர்களின் TPF கணக்குத்தாள்களை ஒரு வாரத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் குடியாத்தம் வட்டார அமைப்பின் சார்பில் கணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.