Breaking News: ரூ. 7 லட்சம் வரை வருமான வரி கிடையாது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 1, 2023

Breaking News: ரூ. 7 லட்சம் வரை வருமான வரி கிடையாது

புதிய வருமான வரி:

7லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு வருமான வரி இல்லை

தனி நபர் வருமான வரி விதிப்பு உச்சவரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்வு

12-15 லட்சம் வரை வருமானமும் இருப்பவர்களுக்கு 15%வரி

7-9லட்சம் வரை இருப்பவர்களுக்கு 5% வரி

15லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் 30% வரி

- நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்

Breaking News: நிதி பற்றாக்குறை 6.4 சதவீதம்
Breaking News: ரூ. 7 லட்சம் வரை வருமான வரி கிடையாது

𝐔𝐍𝐈𝐎𝐍 𝐁𝐔𝐃𝐆𝐄𝐓 𝟐𝟎𝟐𝟑 - பட்ஜெட்டில் ஏழு முக்கிய அம்சங்கள் - தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது - மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

11.4 கோடி விவசாயிகளுக்கு உதவித்தொகை: நிர்மலா சீதாராமன்

நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% சதவீதமாக இருக்கும்

உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு

9 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதாரம் உலக அளவில் 10ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது

தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்து ₹1.97 லட்சமாக உயர்ந்துள்ளது

5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு வங்கி

157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும்

வேளாண்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி கடன் இலக்கு

மீனவர் நலனுக்காக 6,000 கோடி ஒதுக்கீடு 5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு வங்கி

7 முக்கிய அம்சங்களுடன் பட்ஜெட் தயாரிப்பு: நிதியமைச்சர்

ஏழு முக்கிய அம்சங்கள் அடங்கியதாக நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தி 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில், 7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதலுக்கு முக்கியத்துவம், பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் ஆற்றல், நிதித்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். ஏகலைவா பள்ளிக்கூடம் அதிக அளவில் பிரபலப்படுத்தப்படும்

38,800 ஆசிரியர்கள் புதிதாக பணியில் சேர்க்கப்படுவார்கள்

- நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்

மனிதர்கள் கழிவுகளை சுத்தப்படுத்தும் விஷயத்தில் சாக்கடைகளை மனிதர்களால் போடப்படும் துறைகளில் இருந்து 100% மிஷின்களால் போடப்படும் துறைகளாக மாற்றப்படும் மேலும் கழிவுகளை அறிவியல் பூர்வமாக மேலாண்மை செய்வதில் கவனம் செலுத்தப்படும்.

பிரதமரின், வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.79000 கோடி நிதி.

50 புதிய விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள்

நகர்ப்புற வளர்ச்சிக்கு 10 ஆயிரம் கோடி நிதி

50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும்

- நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்
𝐔𝐍𝐈𝐎𝐍 𝐁𝐔𝐃𝐆𝐄𝐓 𝟐𝟎𝟐𝟑 - பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிகள்

பழங்குடியின மாணவர்களுக்காக 38000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு 78000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு வீடுகள் மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனக் கூறிய அவர், 3 ஆண்டுகளில் பழங்குடியினர் நலனுக்கான ஒதுக்கீடு 15000 கோடி செய்யப்பட்டதாக கூறியுள்ளார்

5G சேவைகளை மேம்படுத்துவதற்காக 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும்

தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன் கொண்டுவரப்பட்டது

2070 ஆண்டுக்குள் ஜீரோ எமிஷன் எனப்படும் பூஜ்ஜிய வெளியேற்றம் நிலை எட்டப்படும்

இதற்காக தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.

இயற்கை உரங்களை ஊக்குவிக்க "பிஎம் பிரணாம்" என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும் நாடு முழுவதும் 50 முக்கிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுற்றுலாத்துறை என்பது மேம்படுத்தப்படும். கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்.

மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி

மாங்குரோவ் காடுகள் பாதுகாக்கவும் அதன் அளவை அதிகரிக்கவும் புதிய திட்டம்

நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுன்னறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும்.

குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்

மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் ஊழியர்கள் பணியாளர்கள் இதற்காக பயன்படுத்தப்படலாம்.

அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும். மீன்வளத்துறைக்கு 6000 கோடி*

விவசாயத்துறை போலவே மீனவர்கள் பயன்பெற கூட்டுறவு மாடல் மீன்வளத்துறை திட்டங்களுக்கு 6000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட் உரையில் தெரிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.*

இதன்மூலம் மீன்வளத்துறைக்கு பல புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றார்.*

மத்திய பட்ஜெட் 2023 - 24

அடிப்படை கட்டமைப்பு துறைக்கு 33% நிதி ஒதுக்கீடு*

பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்பு துறைக்கு மட்டும் 33% நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.*

அதன்படி, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ₹10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற கட்டமைப்புக்கு ₹10,000 கோடி, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ₹78,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு ₹2,04,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.*

பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ70,000 கோடி ஒதுக்கீடு

மாநிலங்களின் மூலதன முதலீட்டுக்கு ஆதரவு அளிக்கப்படும்

100 முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்

பிரதமரின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திறன்படுத்தப்படுவர்

பல்வேறு மாநிலங்களில் 30 சர்வதேச திறன் இந்தியா மையங்கள் அமைக்கப்படும்.

தேசிய தரவுகள் நிர்வாகக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும்

அதிகாரப்பூர்வமற்றத் தரவுகளை கண்டறிய இந்தக் கொள்கை வகை செய்யும்

வாடிக்கையாளரை அடையாளம் காணும் KYC நடைமுறை எளிமைப்படுத்தப்படும்
*மத்திய பட்ஜெட்: முக்கிய அம்சங்கள் - 1*

47.8 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 44.6 கோடி பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது

கிராமப்புறங்களில் வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்பு

மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ6,000 கோடி

உஜ்வாலா திட்டத்தின்கீழ் 9.16 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

கால்நடை வளர்ப்பு, மீன் வளத்துறைக்கு ரூ20 லட்சம் கோடி ஒதுக்கீடு

தோட்டக்கலை துறைக்கு ₹2,200 கோடி நிதி ஒதுக்கீடு

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 1 லட்சம் சுய உதவிக்குழுக்களில் பெண்களை இணைத்து பெரும் வெற்றி கண்டுள்ளோம்

"விவசாயத்துறையில் புதிய ஸ்டார்ட் அப்கள் உருவாக்க ஊக்குவிக்கப்படும்

வரும் நிதியாண்டில் 20 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு

குழந்தைகள், இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும்

157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும்

பசுமை எரிசக்தி உற்பத்திக்கு தொடர்ந்து முன்னுரிமை

ஐசிஎம்ஆர் நிலையங்களை தனியாரும் பயன்படுத்தலாம்

740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் நியமனம்

பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ70,000 கோடி ஒதுக்கீடு *மத்திய பட்ஜெட் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை...* *முக்கிய அம்சங்கள்...*

இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது, ஒளிமையமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறது

கோவிட் பெருந்தொற்றின் போது, ஒருவரும் பட்டினியுடன் தூங்கச் செல்லக்கூடாது என்பதற்காக, 28 மாதங்கள் சுமார் 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன

உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு

"நாட்டின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்"

9 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதாரம் உலக அளவில் 10ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாட்டின் வளர்ச்சி 7%-ஆக உள்ளது

உலகளாவிய சவால்கள் இருக்கும் இந்நேரத்தில், G20 தலைமையை இந்தியா ஏற்றது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது

2014 முதல் அரசின் முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்துள்ளது

தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்து ₹1.97 லட்சமாக உயர்ந்துள்ளது

102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசி போட்டுள்ளோம்

9 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% ஆக இருக்கும் என கணிப்பு

11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது

2023-ம் ஆண்டு மேலும் ஓராண்டுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும்

சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது

"9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது ஜம்மு & காஷ்மீர், லடாக் வளர்ச்சிக்கு பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம்" *7 முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்*

*1. ஒருங்கிணைந்த வளர்ச்சி*

*2. அனைவரையும் சென்றடைதல்*

*3. உள்கட்டமைப்பு முதலீடு*

*4. திறன் வெளிக்கொணர்தல்*

*5. பசுமை புரட்சி*

*6. இளைஞர் சக்தி*

*7. நிதித்துறை*

9.6 கோடி சமையல் எரிவாயு கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, 102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன, 47.8 கோடி ஜன்தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு - ₹2,04,000 கோடி

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள்.

பிராந்தியங்களை இணைக்க 50 புதிய விமான நிலையங்கள்

கர்நாடகாவில் வறட்சி பாதித்த பகுதிகளில் ரூ5,300 கோடி ஒதுக்கீடு

கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு நிவாரணமாக ₹5,300 கோடி வழங்கப்படும்

ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு - ₹2,40,000 கோடி

50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும்

"157 புதிய நர்சிங் கல்லூரிகள் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய மருத்துவ கல்லூரிகளில் அமைக்கப்படும்"

"நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் குறித்த தரவு தளம் உருவாக்கப்படும்

கர்நாடகாவில் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு சிறிய நீர்பாசனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ5,300 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்திற்கு ₹79,000 கோடி ஒதுக்கீடு!

கட்டமைப்பு திட்டங்களுக்கு ₹10 லட்சம் கோடி ஒதுக்கீடு!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.