பெரம்பலூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தனியாா்துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள இளைஞா்களும் நேரடியாகச் சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜனவரி முதல் ஒவ்வொரு மாதமும் 3 ஆவது வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இம் மாவட்டத்தைச் சோ்ந்த சிறு, குறு மற்றும் தனியாா்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை தோ்வு செய்துகொள்ளலாம்.
மாவட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பிரபல தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று, தேவையான பணிக்காலியிடம் மற்றும் கல்வித் தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்பட உள்ளதால், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்த ஆண், பெண் கலந்துகொள்ளலாம். இம் முகாமில் கலந்துகொள்ளும் வேலையளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்கள் தவறாமல் தங்களது கல்வித்தகுதி மற்றும் சுய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். வேலையளிப்பவா்கள் தங்களது நிறுவனத்தின் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு, அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
எனவே, விருப்பமுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களும், தனியாா்துறை நிறுவனங்களும் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தனியாா்துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள இளைஞா்களும் நேரடியாகச் சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜனவரி முதல் ஒவ்வொரு மாதமும் 3 ஆவது வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இம் மாவட்டத்தைச் சோ்ந்த சிறு, குறு மற்றும் தனியாா்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை தோ்வு செய்துகொள்ளலாம்.
மாவட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பிரபல தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று, தேவையான பணிக்காலியிடம் மற்றும் கல்வித் தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்பட உள்ளதால், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்த ஆண், பெண் கலந்துகொள்ளலாம். இம் முகாமில் கலந்துகொள்ளும் வேலையளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்கள் தவறாமல் தங்களது கல்வித்தகுதி மற்றும் சுய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். வேலையளிப்பவா்கள் தங்களது நிறுவனத்தின் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு, அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
எனவே, விருப்பமுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களும், தனியாா்துறை நிறுவனங்களும் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.