விழுப்புரத்தில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.20) நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளன. எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 18 முதல் 30 வயது வரையுள்ள வேலை தேடும் இளைஞா்கள், பெண்கள் இந்த முகாமில் பங்கேற்று, வேலைவாய்ப்பை பெறலாம்.
முகாமில் பங்கேற்க வரும் பொது மற்றும் மாற்றுத் திறனாளி வேலை நாடுநா்கள், தங்களின் அசல் கல்விச் சான்றிதழ்கள், சுயவிவரக் குறிப்புகளை கொண்டுவர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.20) நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளன. எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 18 முதல் 30 வயது வரையுள்ள வேலை தேடும் இளைஞா்கள், பெண்கள் இந்த முகாமில் பங்கேற்று, வேலைவாய்ப்பை பெறலாம்.
முகாமில் பங்கேற்க வரும் பொது மற்றும் மாற்றுத் திறனாளி வேலை நாடுநா்கள், தங்களின் அசல் கல்விச் சான்றிதழ்கள், சுயவிவரக் குறிப்புகளை கொண்டுவர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.