இலவச உதவித்தொகை விண்ணப்பம் வழங்கல்
--மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை பெறஇலவச விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன.நேரில் சென்று பெற வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற பொது பிரிவினர், பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறாதோர், மேல்நிலை கல்வி, பட்டதாரிகளுக்கு இலவச உதவித்தொகை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதி திராவிடர்கள்45 வயது, இதர வகுப்பினர் 40 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
ஊதியம் பெறும் பணி, சுயவேலையில் இருக்கக்கூடாது. அரசு, பிற துறைகளில் நிதி உதவி பெறுபவராக இருக்கக்கூடாது. பள்ளி, கல்லுாரி மாணவராக இருக்கக்கூடாது. மருத்துவம், பொறியியல் சட்டம் போன்ற தொழில் கல்வி பதிவுதாரர்கள் உதவித்தொகை பெற முடியாது. உதவித்தொகை பெற்றவர்களும் விண்ணப்பிக்க முடியாது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிப்., 28க்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்
--மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை பெறஇலவச விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன.நேரில் சென்று பெற வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற பொது பிரிவினர், பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறாதோர், மேல்நிலை கல்வி, பட்டதாரிகளுக்கு இலவச உதவித்தொகை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதி திராவிடர்கள்45 வயது, இதர வகுப்பினர் 40 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
ஊதியம் பெறும் பணி, சுயவேலையில் இருக்கக்கூடாது. அரசு, பிற துறைகளில் நிதி உதவி பெறுபவராக இருக்கக்கூடாது. பள்ளி, கல்லுாரி மாணவராக இருக்கக்கூடாது. மருத்துவம், பொறியியல் சட்டம் போன்ற தொழில் கல்வி பதிவுதாரர்கள் உதவித்தொகை பெற முடியாது. உதவித்தொகை பெற்றவர்களும் விண்ணப்பிக்க முடியாது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிப்., 28க்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.