சென்னையில் பிப்ரவரி -11 இல் CPS ஒழிப்பு கோரிக்கை மாநாடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 22, 2023

சென்னையில் பிப்ரவரி -11 இல் CPS ஒழிப்பு கோரிக்கை மாநாடு

சென்னையில் பிப்ரவரி -11 இல் CPS ஒழிப்பு கோரிக்கை மாநாடு..

சென்னையில் FEB -11 இல் CPS ஒழிப்பு கோரிக்கை மாநாடு....

அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தக் கோரி CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் சென்னையில் பிப் -11 இல் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது...

சென்னையில் பிப்.11ல் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் கோரிக்கை மாநாடு

வேடசந்துார், ஜன.22 "அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண் டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத் தக்கோரி,சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் சென்னையில் பிப்.11 ல் மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது," என, ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தெரி வித்தார்.

திண்டுக்கல்மாவட்டம் வேடசந்துாரில் அவர் கூறியதாவது:

தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தால் ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய் வூதியம் என எந்த பயனும் இல்லை. ராஜஸ் தான்,ஜார்க்கண்ட், பஞ்சாப் போன்ற மாநிலங் களில் தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது.

ஆனால் தமிழக அரசு மட்டும் அதை ரத்து செய்ய மறுக்கிறது. ரத்து செய்வோம் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ள நிலையில் வெற்றி பெற்று 20 மாதங்களைக் கடந்த நிலையில் இது குறித்த எந்த முடிவுக்கும் அரசு இன்னும் வரவில்லை.

இந்த திட்டத்தை ரத்து செய்தாலே அரசுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி உபரி நிதி கிடைக்கும் என் கிறோம். இதை வலியுறுத்தி தான் மாநில அள விலான கோரிக்கை மாநாடு பிப். 11 ல் சென் னையில் நடைபெற உள்ளது.முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர், என் றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.