ஜாக்டோ - ஜியோ சேலம் மாவட்ட மையம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - நாள்: 05.01.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 4, 2023

ஜாக்டோ - ஜியோ சேலம் மாவட்ட மையம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - நாள்: 05.01.2023

ஜாக்டோ - ஜியோ

சேலம் மாவட்ட மையம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாள்: 05.01.2023, வியாழக்கிழமை, மாலை 5:00 மணி

இடம் : நாட்டாண்மை கழக கட்டிட வளாகம் முன்பு, சேலம் மாவட்டம்

தலைமை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

அன்புள்ள அரசு ஊழியர்களே, ஆசிரியர்களே, பணியாளர்களே, வணக்கம். கடந்த 26.12.2022 அன்று நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவின் அடிப்படையில் எதிர்வரும் 05.01.2023 அன்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்திட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் நடத்திட முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், சேலத்தில் அனைவரும் பங்கேற்க கேட்டுக் கொள்கிறோம்.

கோரிக்கைகள்

பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

முடக்கப்பட்ட அகவிலைப்படி, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

+ தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர், வருவாய் கிராம உதவியாளர், ஊர் புற நூலகர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். முறைப்படுத்த வேண்டும்.

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகை உடன் வழங்க வேண்டும். மாண்புமிகு முதல்வர் பங்கேற்ற வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் முதல்வரிடம் ஜாக்டோ - ஜியோ சார்பில் வழங்கப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர், அரசு பணியாளர் மற்றும் துறை பிரிவு வாரி ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.