மண்டல வாரியான ஆய்வுக் கூட்டத்திற்கு ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 1, 2022

மண்டல வாரியான ஆய்வுக் கூட்டத்திற்கு ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

மதுரை மண்டல வாரியான ஆய்வுக் கூட்டத்திற்கு ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

பள்ளிக்கல்வி - மதுரை மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் 03.11.2022 மற்றும் 04.11.2022 ஆகிய தேதிகளில் நடைபெறுதல் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் நியமனம் – தகவல் தெரிவித்தல் - சார்பு.

பார்வை :

1. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு, நாள்:12.10.2021.

2. மதுரை-6, பள்ளிக் கல்வி ஆணையரின் கடித ந.க.எண். 43363/பிடி1/இ2/2022, நாள்:10.10.2022.

விதமாக, அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, மண்டல வாரியான ஆய்வுகி கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களும் கலந்து கொண்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

பார்வை 2-60 காணும் கடிதப்படி 2022-23 இவ்வாய்வுக்கூட்டம் இரண்டாம் கட்டமாக ஆய்வு ஆம் கல்வியாண்டில் கூட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்தில் இரண்டு நாட்கள் களப்பணி நடத்திடவும், இரண்டாம் நாள் ஆய்வுக்கூட்டம் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அக்கூட்டத்தின் இரண்டு நாட்களிலும் சார்ந்த துறைத் தலைவர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பள்ளி பார்வை மேற்கொள்வர். இரண்டாம் நாள் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் தொடர்புடைய நடைபெறவுள்ளது. கள அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்

மதுரை மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் 03.11.2022 மற்றும் 04.11.2022 அன்று நடைபெறவுள்ளது. மண்டல வாரியான ஆய்வுக்கூட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ளுவதற்காக கீழ்க்காணும் இயக்குநர்கள்/இணை நியமிக்கப்படுகிறார்கள்.
மேற்கண்ட அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களை, 03.11.2022 மற்றும் 04.11.2022 ஆகிய இரு நாட்களிலும் ஆய்வு செய்து 04.11.2022 அன்று. மதுரையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆக்கப் பூர்வமான கருத்துக்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மதுரை முதன்மைக் கல்வி அலுவலர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கு அல்லது ஏதாவது ஒரு கல்லூரி/பள்ளி கூட்டரங்கில் உள்ள ஆய்வுக்கூட்டத்தினை நடத்திடுமாறும் ஆய்வுக்கூட்டத்திற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

மதுரை மண்டலத்தை உள்ளடக்கிய ஆய்வுக்கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (Secondary and Elementary), உதவி திட்ட அலுவலர்கள்(APO), கூடுதல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்(ADPC), வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமய தலைமையிடத்து பயிற்றுநர்கள், பள்ளித்துணை ஆய்வாளர்கள் (DI), அரசு பொது தேர்வில் மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதம் முதன்மையாக உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இரண்டு பேர் மற்றும் தேர்ச்சி உள்ள விகிதம் மிக குறைந்த விழுக்காடு பெற்ற அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இரண்டு பேர் இவ்ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட அலுவலர்களைத் தவிர மற்றவர்கள் யாவரும் கலந்துகொள்ள வேண்டாம் என சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.