பிளஸ் 2: புதிய தோ்வு மையங்கள் பட்டியலை அனுப்ப உத்தரவு
பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான புதிய மையங்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தோ்வுத் துறை இயக்குநா் சா. சேதுராம வா்மா அனுப்பிய சுற்றறிக்கை: நிகழ் கல்வியாண்டில் ( 2022-23) பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு மாா்ச் மாதம் நடத்தப்படவுள்ளது. இதற்காக புதிய தோ்வு மையங்கள் அமைப்பது தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தங்கள் கருத்துருக்களை அனுப்ப வேண்டும். தங்கள் மாவட்டத்தில் 10 கி.மீ. தொலைவு வரை சென்று தோ்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு, அவா்கள் பயிலும் பள்ளியிலேயே தோ்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதுதவிர தோ்வு மையம் அமையவுள்ள பள்ளிகளை கட்டாயம் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல், தோ்வு மையம் தேவை என்பதற்கான காரணத்தை பள்ளிகளும் பதிவு செய்ய வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தோ்வு மையங்களாக செயல்பட அனுமதி கிடையாது. மேலும், பள்ளிகளில் வழங்கும் கருத்துகளை தோ்வுத்துறைக்கு வழங்குவதுடன், இதற்கான அறிக்கையை அக்.27-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான புதிய மையங்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தோ்வுத் துறை இயக்குநா் சா. சேதுராம வா்மா அனுப்பிய சுற்றறிக்கை: நிகழ் கல்வியாண்டில் ( 2022-23) பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு மாா்ச் மாதம் நடத்தப்படவுள்ளது. இதற்காக புதிய தோ்வு மையங்கள் அமைப்பது தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தங்கள் கருத்துருக்களை அனுப்ப வேண்டும். தங்கள் மாவட்டத்தில் 10 கி.மீ. தொலைவு வரை சென்று தோ்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு, அவா்கள் பயிலும் பள்ளியிலேயே தோ்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதுதவிர தோ்வு மையம் அமையவுள்ள பள்ளிகளை கட்டாயம் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல், தோ்வு மையம் தேவை என்பதற்கான காரணத்தை பள்ளிகளும் பதிவு செய்ய வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தோ்வு மையங்களாக செயல்பட அனுமதி கிடையாது. மேலும், பள்ளிகளில் வழங்கும் கருத்துகளை தோ்வுத்துறைக்கு வழங்குவதுடன், இதற்கான அறிக்கையை அக்.27-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.