ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. ஜே.இ.இ. மெயின் தேர்வில் 24 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட 5 மாணவர்களின் தேர்வு முடிவுகளை தேர்வு முகமை நிறுத்தி வைத்துள்ளது.
p style="text-align: justify;">ஜே.இ.இ. மெயின் தேர்வு முதல் தாள்(பி.இ./பி.டெக்) முடிவுகளை தேசிய தேர்வு முகமை திங்கள்கிழமை வெளியிட்டது.
தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 24 பேர் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட காரணத்திற்காக 5 தேர்வர்களின் முடிவுகளை தேசிய தேர்வு முகமை நிறுத்தி வைத்துள்ளது.
தேர்வு முடிவுகளைப் பெற மாணவர்கள் விண்ணப்பப் படிவ எண், பிறந்த தேதி மற்றும் கடவுச்சொல் அவசியம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.