கரோனா பேரிடர் காரணமாக, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை இரண்டு பருவத் தேர்வுகளாக நடத்தியிருந்தது சிபிஎஸ்இ நிர்வாகம். இந்த நிலையில், இன்று காலை பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளையும் பிற்பகல் 2 மணியளவில் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளையும் வெளியிட்டது.
இதையும் படிக்க | இணையதளத்தில் இன்று பிளஸ் 1 விடைத்தாள் நகல்
மொத்தம் 100 மதிப்பெண் கொண்ட ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற மாணவர்கள் 33% மதிப்பெண் பெற வேண்டியது அவசியம். மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbse.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விடவும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மாணவர்களில் 94.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மாணவர்களில் 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே வேளையில் 95.21% மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மூன்றாம் பாலினத்தவர் 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.