மாணவர்களுக்கான சிறப்புக் கட்டணம் இழப்பீட்டுத் தொகை தேவைப்பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 28, 2022

மாணவர்களுக்கான சிறப்புக் கட்டணம் இழப்பீட்டுத் தொகை தேவைப்பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

பார்வை- 1ல் காணும் அரசாணையின்படி தமிழகத்தில் செயல்படும் அரசு/அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த சிறப்புக் கட்டணத்தை இரத்து செய்ததினால் ஏற்படும் நிதி இழப்பினை ஈடுசெய்யும் வலகயில் பள்ளிகளுக்கான சிறப்புக் கட்டன இழப்பீட்டுத் தொகை 2008-2009 ஆம் ஆண்டு முதல் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பார்வை-2 ல் காணும் அரசாணையின்படி மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் (கள்ளர் சீரமைப்பு) உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான சிறப்பு கட்டனா இழப்பீட்டுத் தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

பார்வை 3- ல் காணும் இவ்வாணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளின் படி 2022-2023-ஆம் கல்வி ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 2022-2023-ஆம் ஆண்டிற்கான சிறப்பு கட்டண இழப்பீட்டு தொகைக்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் மொத்த எண்ணிக்கை விவரம் மற்றும் கள்ளர் உயர்/மேல்திலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை (மதுரை, தேனி, திண்டுக்கல்) முழுமையாகவும், துல்லியமாகவும் அனைத்து ஈல்வியியல் மேண்மை தகவல் மையம் (EMIS- Educational Management Information System) இணையதளம் ஊயிலாக பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.