அகவிலைப்படி உயர்வு ஆசிரியர் சங்கம் கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 3, 2022

அகவிலைப்படி உயர்வு ஆசிரியர் சங்கம் கோரிக்கை

அகவிலைப்படி உயர்வு ஆசிரியர் சங்கம் கோரிக்கை

சென்னை, ஜூன் 3

மத்திய அரசை போல், தமிழக அரசு ஊழியர் களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கும் படி, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத் துள்ளனர்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் அறிக்கை: மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஜன., 1 முதல், 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படு கிறது.

ஐந்து மாதங்கள் ஆகியும், தமிழக அரசு ஊழி யர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை. எனவே, அகவிலைப் படி உயர்வை நிலுவையுடன் சேர்த்து வழங்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டே ஈட்டிய விடுப்பு தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஏற் கனவே நடைமுறையில் இருந்த ஈட்டிய விடுப்பு தொகை வழங்க வேண்டும்.

புதிய காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற்ற பின், அதற்கான தொகையை திரும்ப பெறுவ தில் சிக்கல் உள்ளது. எனவே, புதிய காப்பீட்டு திட்டத்தில், கட்டணமில்லா சிகிச்சை முறையை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.