இந்திய அஞ்சல் துறை வங்கியில் எக்ஸிகியூட்டிவ் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 17, 2022

இந்திய அஞ்சல் துறை வங்கியில் எக்ஸிகியூட்டிவ் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2022

இந்திய அஞ்சல் துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறை வங்கியில்(ஐபிபிபி) காலியாக உள்ள 650 எக்ஸிகியூட்டிவ் பணியிங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். IPPB/HR/CO?REC/2022-23/01

பணி: Executive

காலியிடங்கள்: 650

சம்பளம்: மாதம் ரூ.30,000 வயதுவரம்பு: 30.04.2022 தேதியின்படி 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் 30.04.1987 - 30.04.2002 ஆம் ஆண்டுக்குள் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் கிராமின் டாக் சேவக் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, கடலூர், ஈரோடு, நாகர்கோவில், சேலம், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விருதுநகர்

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூலை 2022 இல் நடைபெறும். தேர்வு நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்திகொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை: www.ippbonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2022

மேலும் விவரங்கள் அறிய www.ippbonline.com அல்லது https://www.ippbonline.com/documents/31498/132994/1652106270457.pdf என்ற இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.