19ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 9, 2022

19ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

19-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

சட்டமேதை அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தனித்தனியாக பேச்சுப் போட்டி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க தலா இரு மாணவா்களை தோ்வு செய்து அனுப்பி வைக்க கல்லூரி முதல்வா்கள், பள்ளி தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி 19-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரி, பள்ளி மாணவா்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

வேலூா் மாவட்ட கல்லூரி, பள்ளி மாணவா்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் நடக்க உள்ளது. பள்ளி மாணவா்களுக்கான போட்டி காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டி மதியம் 2 மணிக்கும் தொடங்கப்படும்.

போட்டிகளில் பங்கேற்க கல்லூரி, பள்ளி மாணவா்கள் 2 பேரை அந்தந்த கல்லூரிகளின் முதல்வா், பள்ளிகளின் தலைமையாசிரியா்களே தோ்வு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வெற்றி பெறும் கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கு தனித்தனியாக மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளன. மேலும், பள்ளி மாணவா்களுக்கு நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களில் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவா் தனியாகத் தோ்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப்பரிசுத் தொகை தலா ரூ.2000 வழங்கப்பட உள்ளது. இந்தப் போட்டிகளில் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.