பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 28, 2026

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் Students who have completed Plus-2 may apply to enroll in a degree program in Labour Management at a Tamil Nadu government educational institution.

தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்பில் சேரலாம்.

இதற்கு மே மாதம் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தின் இயக்குநரும், தொழிலாளர் நலத் துறையின் கூடுதல் ஆணையருமான ஜி.சசிகலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:



தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் சென்னை அம்பத்தூர், மின்வாரிய சாலை, மங்களபுரத்தில் (அரசு ஐடிஐ பின்புறம்) இயங்கி வருகிறது. இங்கு பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), பி.ஜி.டி.எல்.ஏ. (தொழிலாளர் நிர்வாகம்) (மாலை நேரப் படிப்பு), டிஎல்ஏ (தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும்) (வார இறுதி) படிப்பு ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.

இப்படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.


மேலே குறிப்பிடப்பட்ட படிப்புகளுக்கு 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தற்போது விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்பிலும், பட்டதாரிகள் எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்பிலும் முதுகலை டிப்ளமா மற்றும் டிப்ளமா படிப்புகளிலும் சேரலாம்.

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவர். இந்நிலையத்தில் தங்கும் விடுதி வசதி இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இருக்கிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ.200. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.100 மட்டும். அவர்கள் சாதிச் சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை தபாலில் பெற, உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தபால் கட்டணம் ரூ.50 ஆகியவற்றுக்கான வங்கி வரைவோலையை 'The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai' என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால் அல்லது விரைவு அஞ்சல் அல்லது கூரியர் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 18-ம் தேதி ஆகும்.

மேலும் விவரங்கள் அறிய மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர்களான எம்.காமராஜ் (ஆராய்ச்சி அலுவலர் - மொபைல் எண்: 8667754203)), எஸ்.கார்த்திகேயன் (உதவிப் பேராசிரியர், மொபைல் எண்: 9965899822) ஆகியோரை தொடர்புகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.