10ஆம் பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் 03.09.2025 ( புதன்கிழமை ) அன்று காலை 10.00 மணி முதல் வழங்கப்படும் - DGE அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 31, 2025

10ஆம் பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் 03.09.2025 ( புதன்கிழமை ) அன்று காலை 10.00 மணி முதல் வழங்கப்படும் - DGE அறிவிப்பு.



10ஆம் பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் 03.09.2025 ( புதன்கிழமை ) அன்று காலை 10.00 மணி முதல் வழங்கப்படும் - DGE அறிவிப்பு.

மார்ச் / ஏப்ரல் -2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் 03.09.2025 ( புதன்கிழமை ) அன்று காலை 10.00 மணி முதல் வழங்கப்படும் . பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும் , தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் .

செப்.3 முதல் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 16-ம் தேதி வெளி யிடப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 19-ம் தேதி முதல் வழங் கப்பட்டன. எனினும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வு மையங்களிலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.