BEOs Counselling - வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2025 2026 அட்டவணை
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வந்தது . கடைசியாக 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது . தற்போது 2025-2026ஆம் கல்வியாண்டில் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
அக்கலந்தாய்வில் ஒன்றியங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் கட்டாயமாக பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளவேண்டும் . இப்பொதுமாறுதல் கலந்தாய்வில் 30.06.2025 ல் ஓய்வு பெற இருக்கும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் , தற்போது பணிபுரியும் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பணியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தாலும் , அவர்களுக்கு இப்பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்பவர்களின் முன்னுரிமை அவர்கள் பணிபுரியும் ஒன்றியங்களில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை தயார் செய்யப்பட்டு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் . ஒன்றியங்களில் பணியில் சேர்ந்த தேதி ஒன்றாக இருக்கு பட்சத்தில் அவர்கள் முதன் முதலில் வட்டாரக் கல்வி அலுவலராக பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையிலும் , முதன் முதலில் வட்டாரக் கல்வி அலுவலராக பணியில் சேர்ந்த தேதியும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் பிறந்த தேதியின் அடிப்படையிலும் ( வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை ) , பிறந்த தேதியும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பெயரின் ஆங்கில எழுத்து வரிசையின் படியும் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும்
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 முன்னிலை;முனைவர்.பூஆநரேஷ்
ந.க.எண்: 004634/ஜூ1/2025, நாள்: .05.2025
பொருள்: தொடக்கக்கல்வி - பொதுமாறுதல் கலந்தாய்வு - 2025-26 ஆம் கல்வி ஆண்டு தற்போதைய ஒன்றியத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் (30.04.2025) பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு
பார்வை:
நடத்துதல்-சார்ந்து.
1 அரசாணை (நிலை) எண்.149, பள்ளிக் கல்வி (ஜி) துறை, நாள்.28.08.2008
2 அரசாணை (நிலை) பள்ளிக் எண்:159, கல்வி [ப.க1(1)]த்துறை, நாள்.09.09.2022
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் மொத்தம் 851 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் உள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் கீழ் குறிப்பிட்டுள்ள நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை ஆண்டாய்வு மேற்பார்வையிடுதல். மற்றும் பள்ளி 2. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் பிற பணப்பலன்கள் பெற்று வழங்குதல்.
3. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் தயாரித்தல் மற்றும் பதவி உயர்வு வழங்குதல்.
4. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் ஓய்வூதிய பணப்பலன்கள் பெற்று வழங்குதல்.
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. தற்போது 2025-2026ஆம் கல்வியாண்டில் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அக்கலந்தாய்வில் ஒன்றியங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் கட்டாயமாக பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளவேண்டும். இப்பொதுமாறுதல் கலந்தாய்வில் 30.06.2025 -ல் ஓய்வு பெற இருக்கும் வட்டாரக்கல்வி அலுவலர்கள், தற்போது பணிபுரியும் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பணியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தாலும், அவர்களுக்கு இப்பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்பவர்களின் முன்னுரிமை அவர்கள் பணிபுரியும் ஒன்றியங்களில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை தயார் செய்யப்பட்டு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். ஒன்றியங்களில் பணியில் சேர்ந்த தேதி ஒன்றாக இருக்கு பட்சத்தில் அவர்கள் முதன் முதலில் வட்டாரக் கல்வி அலுவலராக பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையிலும், முதன் முதலில் வட்டாரக் கல்வி அலுவலராக பணியில் சேர்ந்த தேதியும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் பிறந்த தேதியின் அடிப்படையிலும் (வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை), பிறந்த தேதியும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பெயரின் ஆங்கில எழுத்து வரிசையின் படியும் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும். மேற்குறிப்பிட்டவாறு ஒன்றியங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணிபுரிந்து வரும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு கீழ் குறிப்பிட்ட வழிமுறைகளின் அடிப்படையில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
1 2025-2026-ஆம் கல்வியாண்டில் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மாநில முன்னுரிமைப்பட்டியலின் படி முதலில் மாவட்டத்திற்குள்ளான மாறுதல் காலந்தாய்வும், பின்னர் மாவட்டம் விட் மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.
2. மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களின் முன்னுரிமை அவர்கள் முதன் முதலில் வட்டாரக்கல்வி அலுவலர் பதவியில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். வட்டாரக்கல்வி அலுவலர் பதவியில் பணியில் சேர்ந்த தேதி ஒன்றாக இருக்கும் பட்சத்தில் தற்போது பணிபுரியும் ஒன்றியத்தில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும்.
3. ஒரே ஒன்றியங்களில் 30.04.2025 (crucial date) நிலவரப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கட்டாயமாக பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.
வட்டாரக் கல்வி 4. பார்வை 1இல் கண்டுள்ள அரசாணையில் பணிமாறுதல் / பதவி உயர்வு மூலம் வட்டாரக் கல்வி அலுவலராக பணிபுரிபவர்கள் தாங்கள் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பணிபுரிந்த ஒன்றியங்களில் அலுவலர்களாக பணிநியமனம் வழங்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தெரிவித்துள்ளவாறு வட்டாரக் இவ்வரசாணையில் கடைசியாக தலைமையாசிரியர்களாக நடுநிலைப்பள்ளி ஒன்றியங்களை தவிர மற்ற ஒன்றியங்களுக்கு மாறுதலில் செல்லுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
அலுவலர்கள் பணிபுரிந்த 5. பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ளும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தற்போது பணிபுரியும் ஒன்றியம் மற்றும் அதற்கு முன்னர் பணிபுரிந்த ஒன்றியத்திற்கு மீளவும் மாறுதல் கோரக் கூடாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
6. 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் ஓய்வு பெறும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தற்போதைய ஒன்றியத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருந்தாலும் பொது மாறுதல் கலந்தாய்வில் 30.06.2025 வரை ஓய்வு பெற உள்ளவர்களுக்கு கலந்தாய்வில் கலந்துக்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இதற்கு முந்தைய பொது மாறுதல் கலந்தாய்வில் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு முதலில் மாவட்டத்திற்குள்ளும், பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வும் முதலில் நடத்தப்பட்டு பின்பற்றி தற்போதும் மாவட்டத்திற்குள்ளும் பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டமும் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். வந்தது. அதே முறையையே தற்போது பணிபுரியும் ஒன்றியங்களில் மூன்று ஆண்டுகளுக்கு (30.04.2025) மேல் பணிபுரியும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளுவதற்கு இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதினை பூர்த்தி செய்து சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களை கையொப்பமிட்டு, Scan செய்து deeisection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கால மேலும், 2025-26 ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அட்டவணையினை அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்தும், வட்டாரக்கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்படும் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான விண்ணப்பங்களின் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் முகமையில் (EMIS) பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அனைத்து அலுவலர்களுக்கும் (தொடக்கக்கல்வி) தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு:
1. கலந்தாய்வு அட்டவணை
2. விண்ணப்பபடிவம் மாவட்டக் கல்வி 上 தொடக்கக்கல்வி இயக்குநர் சே.க 515/25 பெறுநர் அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி)
நகல்
சென்னை-06, மாநில திட்ட இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.(EMIS) தொடக்கக் கல்வி இயக்ககம்
2025-2026 ஆம் கல்வி ஆண்டு வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல்
கலந்தாய்வு அட்டவணை
BEOs Counselling - வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2025 2026 அட்டவணை
CLICK HERE TO DOWNLOAD 2025 BEOs CounsellingPDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.