எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 3-ம் சுற்று கலந்தாய்வு தொடங்கியது
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ்படிப்புகளுக்கான இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவில், 681 எம்பிபிஎஸ் இடங்களும், 971 பிடிஎஸ் இடங்களும் காலியாக இருந்தன.
இந்த இடங்களை நிரப்புவதற்கான 3-ம் சுற்று (மாப் அப்) கலந்தாய்வுக்கான பதிவு https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் நேற்று தொடங்கியது.
கல்லூரிகளில் இடங்களை வரும் 12 முதல் 14-ம் தேதிவரை தேர்வு செய்யலாம். தரவரிசைப்படி இடங்கள் பெற்றவர்கள் விவரங்கள்வரும் 17-ம் தேதி வெளியிடப்படும். இடஒதுக்கீடு பெற்றவர்கள் வரும் 23-க்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.