6 முதல் 8 ஆம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறி காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளிடுதல் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.
பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறி காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளிடுதல் வழிகாட்டி நெறிமுறைகள் - சார்ந்து பள்ளிக்கல்வி & தொடக்கக் கல்வி இயக்குநர்களின் செயல்முறைகள் பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் இணைச்செயல்முறைகள், சென்னை-06
ந.க.எண்.018919/ஜெ2/2024, நாள்.07.10.2024
பொருள்:: பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி 2024 2025 ஆம் கல்வி ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறி/ காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளிடுதல் வழிகாட்டி நெறிமுறைகள் - சார்ந்து.
1. 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவ தொகுத்தறி / காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளிட வேண்டும்.
2. விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி / காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களை (100 மதிப்பெண்கள்) பாட வாரியாக அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் உள்ளிடுமாறு EMIS தளத்தில் உள்ளிடுமாறு இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் அறிவுறுத்தப்படுகிறது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 3. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 6 முதல் 8 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இது சார்ந்த விவரத்தினை தெரிவிக்குமாறும், ஆசிரியர்கள் தெளிவுற அறிந்திருப்பதையும் உறுதி செய்யவேண்டும். 4. அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இது சார்ந்த விவரத்தினை தெரிவிக்குமாறும், ஆசிரியர்கள் தெளிவுற அறிந்திருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ளனவற்றை நடைமுறைப்படுத்தும்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறது.
இணைப்பு மதிப்பீடு உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகள்
இயக்குநர்
தொடக்கக் கல்வி இயக்குநரகம்
7.10-224
பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் CLICK HERE TO DOWNLOAD DSE DEE Joint Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.