காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? அமைச்சர் பதில்
செப் .28 முதல் அக் .2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டு , 3 - ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன . அதன் பிறகு , அக் .4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும் . பின்னர் சனி , ஞாயிறு விடுமுறை வருகிறது . எனவே அக் .6 - ம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்குமாறு கோரிக்கை எழுந்தது . இந்நிலையில் , காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.