02.10.2024 - கிராமசபைக் கூட்டங்களில் ஆசிரியர்கள் கலந்துகொள்ள வேண்டும் - Proceedings
பள்ளி சாரா கல்வி இயக்ககம் , இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி , " புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 " - ஆம் கல்வியாண்டிற்குள் " முழு எழுத்தறிவு பெற்ற நகர / கிராம பஞ்சாயத்து " என்கிற இலக்கை அடையும் வகையில் வருகின்ற 02.10.2024 ( அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் ) அன்று அனைத்து நகர மற்றும் கிராம பஞ்சாயத்துகளிலும் நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டங்களில் இணைப்பில் உள்ள தீர்மானத்தை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உரிய அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம், சென்னை-06 - "புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022- 2024-25ஆம் ஆண்டு செயல்பாடுகள்-02.10.2024 (அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள்) அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டம் "முழு எழுத்தறிவு பெற்ற நகர /கிராம பஞ்சாயத்து" என்கிற இலக்கை அடையும் வகையில் தீர்மானம் நிறைவேற்றக் கோருதல் - சார்பு
1. மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் 2022-23, பள்ளிக் கல்வித் துறை மான்யக் கோரிக்கை எண் 43, அறிவிப்பு எண். 34, நாள் 11.04.2022
4 2. 2024-25ஆம் ஆண்டிற்கான புதிய பராத எழுத்தறிவுத் திட்டஏற்பளிப்புக் குழு கூட்ட (PAB) நாள் 22.03.24 3. இவ்வியக்கக செயல்முறைகள் ந.க. எண். 450
/ஆ2/2022, நாள்: 23.04.2024, 09.07.2024 மற்றும் 09.08.2024.
தமிழ்நாட்டில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் வாயிலாக அனைத்து 38 மாவட்டங்களிலும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டச் செயல்பாடுகள் தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பார்வை- 3இல் காணும் செயல்முறைக் கடிதங்களின்படி, 15 வயகுக்குமேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாத அனைவரையும் முழுமையாக் கண்டறிந்து அவர்கள் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் செயல்பாடுகள் 2024-ஜீலை மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அனைத்து நகர மற்றும் ஊரகப் பகுதிகளில், வயதுக்குமேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கித் திட்டக் குறிக்கோள்களை உரிய காலத்திற்குள் எட்டிடும் வகையிலும், மாநிலத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக விரைவில் மாற்றிடவும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வது தற்போது மிகவும் அவசியமாகிறது.
இதனைக் கருத்திற்கொண்டு, பார்வை 3-ல் காணும் 09,08.2024 நாளிட்ட இவ்வியக்கக செயல்முறைகளின்படி, கடந்த 15.08.2024 அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஒவ்வொரு நகர/கிராம பஞ்சாயத்தும் 100% எழுத்தறிவை விரைவில் அடையும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வருகின்ற 02.10.2024 (அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள்) அன்று அனைத்து நகர மற்றும் கிராம பஞ்சாயத்துகளிலும் நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டங்களில் "முழு எழுத்தறிவு பெற்ற நகர /கிராம பஞ்சாயத்து" என்கிற இலக்கை அடையும் வகையில் பின்வருமாறு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
எங்களது.
உள்ள பகுதிகளில் நகர / கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட குடியிருப்புப் வயதுக்குமேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாத அனைவரையும் முழுமையாக் கண்டறிந்து அவர்களை அரசு / அரசுஉதவி பெறும்.
பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகின்ற எழுத்தறிவு மையத்தில் சேர்த்து, அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கி அவர்கள் அனைவரையும் எழுத்தறிவு பெற்றவர்களாக ஆக்குவதன் வாயிலாக எங்களது நகர/கிராம பஞ்சாயத்தை "முழு எழுத்தறிவு பெற்ற நகர/ கிராம பஞ்சாயத்தாக" விரைவில் மாற்றுவோம் எனவே, முன்குறிப்பிட்டுள்ளபடி, தீர்மானம் நிறைவேற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை தவறாது மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் தொகுப்பு அறிக்கையை உரிய புகைப்பட ஆவணங்களுடன் சமர்பித்திடவும் இவ்வியக்ககத்திற்கு 30.10.2024-க்குள் கொள்ளப்படுகிறது.
இணைப்பு :
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.