Regarding the request to take necessary steps for second phase retraining of Polling Officers on 13.04.2024,
பொதுத்தேர்தல் 2034 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 13.04.2024 அன்று இரண்டாம்கட்ட மறுபயிற்சி அளிப்பதற்கு வேண்டிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ள கோருதல் தொடர்பாக,
பார்வை:
1. தேர்தல் நடத்தும் அலுவலரின் பயிற்சி கையேடு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024.
2. மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரை :08.04.2024.
விழுப்புரம் மாவட்டம் 13. விழுப்புரம் (தனி) நாடாளுன்ற தொகுதி மற்றும் 12.ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ள தேர்தலை முன்னீட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு 07.04.2024 அன்று இரண்டாம்கட்ட பயிற்சி நடத்தப்பட்டது.
மேற்கண்ட இரண்டாம்கட்ட மறுபயிற்சி எதிர்வரும் 13.04.2024 அன்று நடைபெறவுள்ளது. மேற்படி பயிற்சியில் ஏற்கனவே கலந்து கொண்ட வாக்குச்சாவடி அலுவலர்கள், கலந்து கொள்ளாத அலுவலர்கள் மற்றும் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் தேர்தல் பயிற்சி அளித்திடுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே மேற்படி நேதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சியினை அளித்திடவும், மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டுள்ள அறிவுரையின்படி சிறப்பான முறையில் பயிற்சி அளித்து அதன் விவரத்தினை 13,04,2024 பிற்பகல் தெரிவித்திடவும் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.