கோடை விடுமுறை அளித்தல் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)- நாகப்பட்டினம் சுற்றறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 5, 2024

கோடை விடுமுறை அளித்தல் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)- நாகப்பட்டினம் சுற்றறிக்கை

மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)- நாகப்பட்டினம் சுற்றறிக்கை

நாகப்பட்டினம் மாவட்டம் (தொடக்கக் கல்வி) அனைத்து ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 5 ஆம் தே தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. ஆதலால் அவவ அவ்வகுப்பு மாணவர்களுக்கு 6-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 6 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை ரம்ஜான் பண்டிகை மற்றும் தேர்தல் பணி நிமித்தம் காரணமாக மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இம்மாணவர்களுக்கு மீண்டும் 22.04.24 மற்றும் 23.04.24 ஆகிய தேதிகளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு நடைபெறும், இவ்வகுப்பு மாணவர்களுக்கு 24.04.24 முதல் கோடைவிடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளி திறப்பு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் அனைவரும் அரசுவிடுமுறை இல்லாத நாட்களில் பள்ளிக்கு வருகைப்புரிந்து மாணவர் சேர்க்கை மற்றும் விடைத்தாள் மதிப்பீடு செய்தல் மற்றும் பிறப் பணிகளை (ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகம்) அமைக்க வரும் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிட அனைத்து தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுனர்கள் வழங்கிடுமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்(பொ). (தொடக்கக் கல்வி), நாகப்பட்டினம்

பெறுநர் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், நாகப்பட்டினம் மாவட்டம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.