மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி சார்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கடிதம் A letter from the district head regarding the third phase of election exercise
மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி சார்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கடிதம்... பாராளுமன்ற பொதுத் தேர்தல்கள் - 2024 தொடர்பாக எண் 11.திருவண்ணாமலை மற்றும் எண் : 12 ஆரணி பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட தேர்தல் வாக்குச் சாவடிகளில் , வாக்குச்சாவடி தலைமை அலுவலராகவும் , இதர தேர்தல் அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் / அரசு ஊழியர்களுக்கு . முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட பயிற்சிக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் முறையே 24.03.2024 மற்றும் 07.04.2024 ஆகிய இரண்டு நாட்களில் அன்று நடைபெற்று முடிந்தன.
தற்போது வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வருகிற 13.04.2024 ( சனிக்கிழமை ) அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ஏற்கனவே 07.04.2024 அன்று 2 - ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற அதே மையங்களில் அந்தந்த சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடங்களிலேயே நடைபெறவுள்ளது . மேற்டி , பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ள இடங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. CLICK HERE TO DOWNLOAD District Collector Letter PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.